இந்திய கடலோர காவல்படையின் மூத்த அதிகாரிகள் பணி உயர்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே டி.ஐ.ஜி அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் தனக்கான ஐ.ஜி அந்தஸ்திலான பணி உயர்வு முறைகேடு மூலமாக தடுக்கப்பட்டதாகவும், தனக்கு கீழே பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு ஐ.ஜி பணி உயர்வை வழங்கும் விதமாக இந்த முறைகேடு நடைபெற்றதாக முறையிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சரின் நேரடி தலையீட்டால் பணி உயர்வுகளுக்கான வாரியத்தின் முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளுக்கான ACR […]
Read Moreஇந்திய கடற்படை அகாடமியில் பயிற்சி நிறைவு விழாவில் மாலத்தீவு நாட்டின பாதுகாப்பு அமைச்சர் திருமதி. மரியா அஹமது தீதி பங்கேற்றார். இதன்மூலம் இந்திய கடற்படை அகாடமியின் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்ற முதலாவது வெளிநாட்டு பாதுகாப்பு அமைச்சர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். இது தவிர மால்த்தீவு நாட்டின் முதலாவது பெண் வழக்கறிஞர் மற்றும் முதலாவது பெண் அமைச்சர் போன்ற சிறப்புகளுக்கும் சொந்தகாரர் ஆவார். கடந்த 23ஆம் தேதி 6 நாள் சுற்றுபயணமாக கொச்சி வந்த அவரை […]
Read Moreஜம்மு காஷ்மீர் மாநிலம் அமைதியாக இருந்த போது தீடிரென அப்பாவி பொதுமக்கள் மற்றும் பிற மாநில தொழில் முனைவோர் தொழிலாளர்கள் ஆகியோர் தாக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவங்களில் பலர் உயிரிழந்த நிலையில் பாதுகாப்பு படைகள் தங்களது நடவடிக்கைகளை தீவிரப்படுத்த படிப்படியாக தாக்குதல்கள் கட்டுபடுத்தப்பட்டன. பாதுகாப்பு படைகளின் சீரிய நடவடிக்கை காரணமாக இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக நம்பதகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போது சீர்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன உளவு சார்ந்த நடவடிக்கைகள் […]
Read Moreநேற்று தைவானுடைய வான் பகுதிக்குள் சுமார் 27 சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. இதனையடுத்து தைவான் விமானப்படை தனது போர் விமானங்களை அனுப்பி எச்சரித்ததாகவும் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை செயல்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தைவானை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் அவ்வப்போது சீன விமானப்படையின் விமானங்கள் தைவானுடைய வான் பாதுகாப்பு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Read Moreஅமெரிக்க ஆய்வு நிறுவனமான RAND Corporation சமீபத்தில் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது அதில் திடுக்கிடும் தகவல் ஒன்றை குறிப்பிட்டுள்ளது. அதாவது கடந்த 1998 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்தி வெற்றியும் பெற்று அணு ஆயுதங்களை உருவாக்கியது. இதன் பிறகே பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை அதிகமாக பயன்படுத்த துவங்கியதாகவும் பாக் ஐ.எஸ்.ஐ திட்டத்தின் படி பயங்கரவாத நடவடிக்கைகள் ஜம்மு காஷ்மீர் தாண்டி விரிவுபடுத்த பட்டதாகவும் அப்படி தான் பாராளுமன்ற தாக்குதல் […]
Read Moreஜப்பானிய பிரதமர் ஃப்யூமியோ கிஷிடா சீனாவை எதிர்கொள்ள அனைத்து வழிகளையும் பரிசீலனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அசாகா ராணுவ முகாமில் விசிட் சென்ற ஜப்பான் பிரதமர் அங்கு வீரர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்தார். மேலும் ஜப்பான் தனது பாதுகாப்பு பட்ஜெட்டை சுமார் 6.75 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்து வான் மற்றும் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read Moreசீனாவுடனான எல்லை கட்டுபாட்டு கோட்டுக்கு அருகே பணியமர்த்தப்படும் அதிகாரிகளுக்கு திபெத் பற்றிய பயிற்சி பெறுவது கட்டாயமக்கப்பட்டு உள்ளது என்பதை அறிவோம். அந்த வகையில் தற்போது மேற்குறிப்பிட்ட எல்லை பகுதியில் பணியமர்த்தப்படும் அதிகாரிகளுக்கு பேச்சுவார்த்தை முறைகளில் பயிற்சி அளிக்க இந்திய ராணுவம் திட்டமிட்டு உள்ளது. இதற்கு காரணம் சீனா மற்றும் இந்தியா இடையிலான இருதரப்பு எல்லை பிரச்சினை மற்றும் ராணுவம் சார்ந்த பேச்சுவார்த்தைகளின் போது நமது இலக்கை வெற்றிகரமாக அடையும் நோக்கம் என கூறப்படுகிறது. சீனர்களை பொறுத்தவரை பேச்சுவார்த்தைகளின் […]
Read Moreஇந்திய கடற்படை தற்போது தனது மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கான அனுமதியை பெற தீவிரம் காட்டி வருகிறது. அந்த விமானந்தாங்கி கப்பலில் வழக்கமான போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா சண்டை விமானங்களும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்திய விமானப்படைக்காக நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஓர் ஆளில்லா சண்டை விமானத்தை உருவாக்கி வருகிறது. ஆனால் இந்திய கடற்படைக்கான ஆளில்லா சண்டை விமானமானது மேற்குறிப்பிட்ட விமானத்தை விட ஆபத்தானதாக இருக்கும் எனவும், கடற்படையின் […]
Read Moreதிறன் மிக்க மற்றும் பயிற்சி பெற்ற பெல்ஜியம் மெலினோய்ஸ் நாய்கள் பயங்கரவாத எதிர்ப்பு படையில் இணைக்கப்பட்டுள்ளன.இது அந்த படைக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது. இந்த பெல்ஜியம் மெலினோய்ஸ் நாய்கள் தாக்கும் ரக நாய்கள் ஆகும் மற்றும் உலகில் பல்வேறு நாடுகளின் இராணுவத்தில் இந்த நாய்கள் உள்ளன.பலரக தாக்குதல்களுக்கென்றே சிறந்த பயிற்சி பெற்றவை இந்த நாய்கள். பாதுகாப்பு பணிகளில் சிறந்து விளங்க கூடிய பலவகை நாய் இனங்களில் இந்த பெல்ஜியம் மெலினோய்ஸ் நாய் இனமும் ஒன்று ஆகும்.தனது ஸ்டமினா, […]
Read Moreகாஷ்மீரில் சிஆர்பிஎப் படைக்கு ஒதுக்கப்பட்ட 65.5 ஏக்கர் நிலத்தை விரைவில் தரும்படி சிஆர்பிஎப் படை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேட்டுள்ளது. அதற்காக நிதியை விரைவில் மாற்றினால் தான் காஷ்மீர் நிர்வாகத்திடம் இருத்து நிலத்தை பெற்று வீரர்களுக்கான இருப்பிடத்தை அமைக்க முடியும் என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலதிக நிலம் பெறும் சிஆர்பிஎப் படையின் கோரிக்கையும் தற்போது பரிசீலனையில் உள்ளது.காஷ்மீரில் பெருமளவு சிஆர்பிஎப் படைப் பிரிவு உள்ளதாக அதற்கேற்ப நிலத்தை வழங்குவது அவசியமாகிறது.மேலும் தற்போது வீரர்கள் அரசு […]
Read More