Day: November 14, 2021

சீனா தான் மிகப்பெரிய எதிரி கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் ராவத் !!

November 14, 2021

சீனா தான் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய எதிரி எனவும் எல்லையில் உள்ள பல்லாயிரம் வீரர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு தங்கள் நிலைகளுக்கு திரும்ப முடியாது என்றார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பும் அதிகரிக்கும் சந்தேகமும் பிரச்சினையை தீர்ப்பதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளன என கூறினார். இவரது பேச்ச இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் சமீபத்திய சீனாவுக்கு எதிரான கண்டன அறிக்கையுடன் நன்கு பொருந்தி போகிறது சீனா எல்லையோரம் மாதிர கிராமங்களை கட்டமைத்து வருவது மற்றுமொரு […]

Read More

சீனாவுக்கு எதிராக தனது 14ஆவது கோர் படைப்பிரிவை வலுப்படுத்தும் ராணுவம் !

November 14, 2021

லடாக்கில் உள்ள எல்லை கட்டுபாட்டு கோடு பகுதிக்கு பொறுப்பான 14ஆவது கோர் படைப்பிரிவை இந்திய தரைப்படை வலுப்படுத்தி வருகிறது. இந்த படைப்பிரிவில் 3 டிவிஷன் வீரர்கள் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக ஒரு டிவிஷன் வீரர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த மாற்றங்கள் அனைத்தும் பனிக்கால சவால்கள் மற்றும் சீன அச்சுறுத்தல்களை முன்னிட்டு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது எல்லையோரம் இரு நாடுகளும் தலா 30,000 வீரர்களை குவித்துள்ள நிலையில் இந்தியா 50,000-60,000 வீர்ரகளையும் சீனா 60,000 […]

Read More

அமெரிக்க ஆயுத ஜாம்பவான் நிறுவனத்துக்கு உதவும் சிறிய இந்திய நிறுவனம் !!

November 14, 2021

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் தயாரிக்கும் MH60 ரோமியோ கடல்சார் ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அந்த ஹெலிகாப்டர்களை இந்திய கடற்படைக்கு வழங்கும் முன்னர் ஒரு மின்னனு பாகத்தை அதில் அமைத்து கொடுக்க இந்தியாவிலேயே ஒரு நிறுவனத்தை தேடி வந்த நிலையில், ரோசல் டெக்கிஸ் எனும் சிறிய இந்திய நிறுவனம் இதற்காக தேர்வு செய்யபட்டு உள்ளது லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் நிபந்தனைகளின்படி இந்த பணிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

மூன்றாவது முறையாக முப்படைகளின் சிறப்பு அதிகாரங்களை நீட்டித்த பாதுகாப்பு அமைச்சகம் !!

November 14, 2021

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அவசரமாக தளவாடங்களை வாங்க உதவும் முப்படைகளின் சிறப்பு அதிகாரத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சிறப்பு அதிகாரங்களை வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாகவும் இது இந்த வருடம் முன்றாவது முறை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் மூப்படைகளின் துணை தளபதிகளும் சுமார் 500 கோடி ரூபாய் வரையிலான கொள்முதல் நடவடிக்கைகளுக்கு அரசின் உத்தரவு இல்லாமலேயே அனுமதி அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

மஹாராஸ்டிராவில் சி-60 கமாண்டோ படை நடத்திய அதிரடி தாக்குதல்

November 14, 2021

மஹாராஸ்டிராவில் சி-60 கமாண்டோ படை நடத்திய அதிரடி தாக்குதலில் 26 நக்சல் பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். மஹாராஸ்டிராவின் கச்சிரோலி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.இந்த சண்டையில் முக்கிய நக்சல் உட்பட 26 பேர் வீழ்த்தப்பட்டுள்ளனர். இது வரை காட்டுப்பகுதியில் இருந்து 26 பேரின் உடல்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக எஸ்பி அங்கித் கோயல் கூறியுள்ளார்.ஏடிஎஸ்பி சௌம்யா முன்டே தலைமையில் சி-60 கமாண்டோக்கள் மர்டின்டோலா காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது அதிகாலை 5 மணிக்கு இந்த சண்டை தொடங்கியுள்ளது. மேலும் […]

Read More

எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியாவிற்கு டெலிவரி செய்ய தொடங்கிய இரஷ்யா

November 14, 2021

S-400 Triumf வான் பாதுகாப்பு அமைப்புகளை திட்டமிட்டப்படி இந்தியாவிற்கு டெலிவரி செய்ய தொடங்கியுள்ளதாக இரஷ்யாவின் Federal Service for Military-Technical Cooperation-ன் இயக்குநர் டிமிட்ரி சுகேவ் அவர்கள் கூறியுள்ளார். இந்த அமைப்புகள் ஏற்கனவே சீனா மற்றும் துருக்கியில் செயல்பாட்டில் உள்ளன.கடந்த அக்டோபர் 2018ல் இந்தியா மற்றும் இரஷ்யா எஸ்-400 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த அமைப்புகள் தற்போது இந்தியாவிற்கு டெலிவரி செய்யப்பட உள்ளன.எஸ்-400 அமைப்பு 400கிமீ தூரம் வரும் எதிரியின் இலக்குகளை வானிலேயே சுட்டு வீழ்த்தும் திறன் பெற்றது.

Read More

மணிப்பூர் தாக்குதலுக்கு பயங்கரவாத இயக்கங்கள் பொறுப்பேற்பு

November 14, 2021

மணிப்பூர் மக்கள் விடுதலை இராணுவம் மற்றும் மனிப்பூர் நாகா மக்கள் முன்னிலை ஆகிய இரு பயங்கரவாத இயக்கங்கள் மணிப்பூர் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளன.இந்த தாக்குதலில் 46 அஸ்ஸாம் ரைபிள்சின் கமாண்டிங் அதிகாரி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள செக்கான் எனும் கிராமத்திற்கு அருகே அதிகாரியின் வாகனம் சென்று கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கண்ணிவெடிகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது பயங்கரவாதிகளை வேட்டையாட மாபெரும் […]

Read More