பூஞ்ச் ஆபரேஷனில் களமிறக்கப்பட்ட இந்திய தரைப்படையின் பாரா வீரர்கள் !!

  • Tamil Defense
  • October 17, 2021
  • Comments Off on பூஞ்ச் ஆபரேஷனில் களமிறக்கப்பட்ட இந்திய தரைப்படையின் பாரா வீரர்கள் !!

பூஞ்ச் மாவட்டத்தில் காடுகளில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்க தரைப்படையின் பாரா வீரர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

இந்த ஆபரேஷனில் தற்போது வரை இந்திய தரைப்படையை சேர்ந்த 9 வீரர்கள் வீரமரணத்தை தழுவி உள்ளனர் என கூறப்படும் நிலையில்,

காவல்துறை அதிகாரிகள் முதலில் இறந்து போன ஐந்து வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியர்வகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்பது உறுதியாகவில்லை என கூறினர்.

விரைவில் பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்படுவர் ஆபரேஷன் முடிந்ததும் அனைத்தும் தெளிவாக தெரிய வரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.