
தலைநகர் தில்லியில் ரகசிய தகவலின் அடிப்படையில் தில்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிரடி நடவடிக்கை ஒன்றை நடத்தியது.
அதன் அடிப்படையில் போலி அடையாள அட்டையுடன் வசித்து வந்த பாகிஸ்தான் நாட்டு பயங்கரவாதி ஒருவன் பயங்கர ஆயுதங்களுடன் லஷ்மி நகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான்.
அவனிடம் இருந்து 1 ஏகே47, ஒரு கூடுதல் மேகஸின் மற்றும் 60 தோட்டாக்கள், 1 கையெறி குண்டு, 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் 50 தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.