
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஶ்ரீநகரில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது அதில் சு30, ரஃபேல் உள்ளிட்ட விமானங்கள் பங்கேற்றன.
அப்போது ரஃபேல் விமானத்தை எடுத்த புகைப்படங்கள் இந்திய விமானப்படையால் தங்களது அதிகாரப்பூர்வ பக்கங்களில் பகிரப்பட்டு உள்ளன.

அவற்றில் ரஃபேல் விமானத்தில் பொருத்தபட்டு இருந்த மைகா மற்றும் ஸ்கால்ப் அல்லது ஸ்டார்ம்ஷேடோ ஸ்டெல்த் ஏவுகணை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.