ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடைபெற்ற அப்பாவி மக்களின் கொலைகளை தொடர்ந்து இத்தகைய தாக்குதல்களை தடுக்கும் வகையில் புதிய ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டம் ஒன்றை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டத்தின்கீழ் ஜம்மு காஷ்மீர் காவல்துறை முதன்மை அமைப்பாக செயல்படும் மேலும் பிற பாதுகாப்பு படைகளுடனும் இணைந்து தாக்குதல்களை தடுக்க பணியாற்றும் என கூறப்படுகிறது. இது பற்றி ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் மூத்த அதிகாரிகள் கடந்த 23ஆம் தேதியன்று மத்திய அமைச்சரிடம் தங்களது திட்டங்களை […]
Read Moreஅமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம் அன்கரேஜ் பகுதியில் நடைபெற்று வரும் யுத் அப்யாஸ் போர் பயிற்சியில் இந்திய அமெரிக்க வீரர்கள் பல்வேறு வகையான பயிற்சிகளை மேற்கொண்டனர். அந்த வகையில் ஆளில்லா வான் அமைப்பு எதிர்ப்பு மற்றும் கண்ணிவெடி எதிர்ப்பு போர் முறைகளில் பயிற்சி மேற்கொண்டனர் அப்போது இந்திய வீரர்கள் கண்ணிவெடி செயலிழப்பில் தங்களது திறன்களை வெளிபடுத்தினர். இதனை தொடர்ந்து அமெரிக்க வீரர்கள் ஆளில்லா விமானங்களை ரேடியோ அலைவரிசைகள் மூலமாக முடக்கும் துப்பாக்கி மூலமாக தங்களது திறன்களை வெளிபடுத்தினர் தொடர்ந்து, […]
Read Moreசீன ராணுவ வீரர்கள் மிளகு ஸ்பிரே, டேசர்கள், உருட்டு கட்டைகள் தடிகள் என வழக்கத்திற்கு மாறான ஆயுதங்கள் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் கைத்துப்பாக்கிகளுடன் ரோந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டேசர் என்பது மின்சார துப்பாக்கி ஆகும் இதுதவிர வீசி தாக்குவதற்கு தோதான கூர்மையான கோடாரி போன்ற ஆயுதங்கள், கூர்மையான முட்கள் கொண்ட தடிகள் பாதுகாப்பு கவசங்கள் என வலம் வருகின்றனர். இவற்றால் தாக்கப்படும் பட்சத்தில் உயரிழப்பு அல்லது படுகாயம் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகமாகும் ஏற்கனவே கல்வானில் […]
Read Moreபூஞ்ச் செக்டாரில் நடைபெற்று வரும் சண்டை நேற்றுடன் 15 நாட்களை எட்டியுள்ளது, தொடர்ந்து ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில் பட்டி துர்ரியான் வனப்பகுதியில் நேற்று துப்பாக்கி சண்டை முண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனரா அல்லது இருதரப்பு சந்திப்பால் ஏற்பட்ட சண்டையா என மேலதிக தகவல்கள் இல்லை. இந்த அடர்ந்த வனப்பகுதி பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது, அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் குகைளை பயங்கரவாதிகள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
Read Moreதெலுங்கானா மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள வெங்கடபூர் பகுதியில் பாதுகாப்பு படைகள் மற்றும் நக்சல்கள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் தான் இந்த வெங்கடபூர் உள்ளது இங்கு முலுகு மாவட்ட காவல்துறையினர் மற்றும் க்ரேஹவுண்ட் கமாண்டோ படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதலில் மூன்று நக்சல்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து 1 SLR, 1 AK47 துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் கைபற்றப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினருக்கு […]
Read Moreகேரள மாநிலத்தில் 3200 ஸ்லீப்பர் செல்கள் மற்றும் சுமார் 32000 பயங்கரவாதிகள் இருப்பதாக ஜிஹாத் வாட்ச் எனும் அமெரிக்க அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. தில்லியில் இருந்து கேரளா சென்ற தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு குழு ஒன்று கண்ணூர் மாவட்டம் தானாவில் ஒரு வீட்டில் வசித்து வந்த இரு பெண்களை கைது செய்து விசாரணை நடத்தியது. அந்த இருவரும் ஷிஃபா ஹாரீஸ் என்பதும் மிஸா சித்திக் என்பதும் கேரளாவில் சுமார் 3200 இஸ்லாமிக் ஸ்டேட் ஸ்லீப்பர் செல்கள் […]
Read Moreஎல்லை பாதுகாப்பு படையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியை சேர்ந்த மொஹம்மது சஜ்ஜாத் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றி வந்தான். இவன் பாகிஸ்தானுடை ஐ.எஸ்.ஐ அமைப்பிற்கு உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளான் அந்த வகையில் ரகசிய ஆவணங்களை கொடுக்கும் போது குஜராத் மாநிலம் காந்திநகரில் கைது செய்யப்பட்டான். இவன் எல்லை பாதுகாப்பு படையில் இணைவதற்கு முன்பு பாகிஸ்தான் சென்றதும் அங்கு 46 நாட்கள் தங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Read More