Breaking News

Day: October 18, 2021

அமெரிக்க விமானத்தை வழிமடக்கி திரும்ப அனுப்பிய ரஷ்ய போர் விமானம் !!

October 18, 2021

அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான பி1-பி லான்சர் சூப்பர்சானிக் குண்டுவீச்சு விமானம் “ஜப்பான் கடல்” பகுதியில் நுழைந்தது. இதனையடுத்து ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான மிக்-31 ரக போர் விமானம் ஒன்று அமெரிக்க விமானத்தை வழிமறித்து குறிப்பிட்ட பகுதியில் இருந்து திரும்ப அனுப்பியது. ரஷ்யாவின் அரசு ஊடகமான டாஸ் இதுபற்றி வெளியிட்ட செய்தியில் அமெரிக்க விமானம் ரஷ்ய எல்லையை கடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. கடந்த சில நாட்கள் முன்பு இதே போன்று மேற்குறிப்பிட்ட அதே பகுதியில் அமெரிக்க கடற்படை நாசகாரி […]

Read More

இந்திய கடற்படை கமாண்டர்களின் ஐந்து நாள் மாநாடு !!

October 18, 2021

இந்திய கடற்படையின் முக்கிய கமாண்டர்கள் அனைவரும் பங்கு பெறக்கூடிய ஐந்து நாள் மாநாடு இன்று துவங்க உள்ளது. இந்த மாநாட்டில் கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் ராவத், தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் நரவாணே மற்றும் விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் சவுதிரி ஆகியோர் பங்கேற்று, இந்திய கடற்படையின் கமாண்டர்களுடன் முப்படைகள் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் இதர பல முக்கிய விஷயங்களை குறித்து விவாதிக்க உள்ளனர். மேலும் இந்திய கடற்படையின் தலைமை தளபதி […]

Read More

இங்கிலாந்து கடற்படையின் விமானந்தாங்கி கப்பல் கூட்டு பயிற்சிக்காக இந்தியா வருகை !!

October 18, 2021

இங்கிலாந்து கடற்படையின் குயின் எலிசபெத் விமானந்தாங்கி கப்பல் தாக்குதல் படையணியானது கூட்டு பயிற்சியை முன்னிட்டு இந்தியா வருகிறது. இதற்காக தற்போது இந்த தாக்குதல் படையணி வங்க கடல் பகுதியில் நுழைந்து மும்பை நோக்கி பயணித்து வருகிறது அதனுடன் நெதர்லாந்து கடற்படையின் எவர்ஸ்டன் எனும் ஃப்ரிகேட்டும் வருகிறது. இந்த தாக்குதல் படையணி இந்தியாவின் முப்படைகளுடன் மிகவும் தீவிரமான போர் பயிற்சிகளில் பங்கு பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜீலை மாதமும் இதே படையணி வங்க கடல் பகுதியில் […]

Read More

மேற்கு கடற்படை தலைமையகத்தை விசிட் செய்த அமெரிக்க கடற்படையின் மூத்த அதிகாரி !!

October 18, 2021

அமெரிக்க கடற்படையின் நடவடிக்கைகள் பிரிவின தலைவரான அட்மிரல் மைக்கேல் கில்டே இந்திய கடற்படையின் மேற்கு கட்டளையத்தின் தலைமையகத்தை விசிட் செய்தார். அவரை மேற்கு கடற்படை கட்டளையக தளபதி வைஸ் அட்மிரல் ஹரி குமார் வரவேற்று தலைமையகத்தை சுற்றி காட்டி பல்வேறு விஷயங்களை குறித்து விளக்கினார். மேற்கு பிராந்திய கடற்படையின் மனிதநேய பணிகள், கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு, கொரோனா பேரிடர் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார். பின்னர் இருவரும் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பு கடற்படை உறவுகள் […]

Read More

உலகத்தின் எந்த பாகத்தையும் தாக்க கூடிய சீனாவின் மிரட்டல் அணுசக்தி ஹைப்பர்சானிக் ஏவுகணை !!

October 18, 2021

சீனா சமீபத்தில் அணுசக்தியால் இயங்கும் திறன் கொண்ட ஹைப்பர்சானிக் ஏவுகணை ஒன்றை தாழ்வான உயரத்தில் உலகை சுற்றி பறக்க வைத்து சோதனை செய்துள்ளது. இந்த சோதனை கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றுள்ளது உலகத்தையே சுற்றி வந்த அந்த ஏவுகணை இலக்கிலிருந்து இரண்டு மைல் தள்ளி போய் தாக்கியுள்ளது. எனினும் ஹைப்பர்சானிக் தொழில்நுட்பத்தில் சீனாவின் அடைந்துள்ள வளர்ச்சி அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது அமெரிக்க உளவுத்துறை நினைத்ததை விடவும் சீனா வேகமாக முன்னோக்கி செல்வது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது […]

Read More

NSG உலகத்தரம் வாய்ந்த பயங்கரவாத எதிர்ப்பு படை உள்துறை அமைச்சர் அமித்ஷா !!

October 18, 2021

மத்திய உள்துறை அமைச்சரான திரு.அமித்ஷா தேசிய பாதுகாப்பு படையின் 37ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது தேசிய பாதுகாப்பு படை ஒர் உலகத்தரம் வாய்ந்த பயங்கரவாத எதிர்ப்பு படை நமது வீரர்களை நினைத்து நாடே பெருமை அடைகிறது என வாழ்த்தினார். தேசிய பாதுகாப்பு படையானது கடத்தல் பணய கைதிகள் மீட்பு பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற படை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த படையில் ராணுவம் […]

Read More

ITBPயில் அதிகாரிகளாக இணைந்த 38 கொரோனா ஒழிப்பு மருத்துவர்கள் !!

October 18, 2021

நேற்று உத்தராகண்ட் மாநிலம் முசோரியில் அமைந்துள்ள ITBP அகாடமியில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் 38 மருத்துவ அதிகாரிகள் படையில் அதிகாரிகளாக இணைந்தனர். இவர்கள் அனைவரும் பயிற்சி காலத்தின் போதே தில்லியில் அமைக்கப்பட்ட சர்தார் பட்டேல் கொரோனா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுப்பட்டனர். பின்னர் நிலைமை சீரானதும் பயிற்சி மையத்திற்கு மீண்டும் பயிற்சியை தொடர திரும்பினர் இதற்காக பயிற்சி காலத்தின் போதே இவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த அதிகாரிகளுக்கு வரைபடம் படித்தல், ஆயுத […]

Read More

75 நாள் தேடலுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய ராணுவ விமானியின் உடல் !!

October 18, 2021

கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள ரஞ்சித் சாகர் அணையில் தரைப்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. தரைப்படைக்கு சொந்தமான இந்த ரூத்ரா தாக்குதல் ஹெலிகாப்டரை இயக்கிய லெஃப்டினன்ட் கர்னல் அபித் சிங் பாத் மற்றும் கேப்டன் ஜெயந்த் ஜோஷி ஆகியோர் மரணத்தை தழுவினர். லெஃப்டினன்ட் கர்னல் அபித் சிங் அவர்களின் உடல் ஒரிரு நாட்களிலேயே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் கேப்டன் ஜெயந்த் ஜோஷியின் உடல் கிடைக்கவில்லை. இந்திய கடற்படையின் […]

Read More