பூஞ்ச் மாவட்டத்தில் காடுகளில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்க தரைப்படையின் பாரா வீரர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆபரேஷனில் தற்போது வரை இந்திய தரைப்படையை சேர்ந்த 9 வீரர்கள் வீரமரணத்தை தழுவி உள்ளனர் என கூறப்படும் நிலையில், காவல்துறை அதிகாரிகள் முதலில் இறந்து போன ஐந்து வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியர்வகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்பது உறுதியாகவில்லை என கூறினர். விரைவில் பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்படுவர் ஆபரேஷன் முடிந்ததும் அனைத்தும் தெளிவாக தெரிய […]
Read Moreஶ்ரீநகர் ஜம்மு விமானப்படை தளங்களை பாதுகாக்க களமிறக்கப்பட்ட NSG !! ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள ஜம்மு மற்றும் ஶ்ரீநகர் விமானப்படை தளங்களை பாதுகாக்க NSG களமிறக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை நேற்று மானேசரில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு படையின் 37ஆவது ஆண்டு விழாவில் அதன் இயக்குனர் ஜெனரல் எம் ஏ கணபதி தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு படை அங்கு தகுந்த ட்ரோன் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு நிறுவப்படும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் எனவும் […]
Read Moreஅக்டோபர் 14ஆம் தேதி HQ-9/P எனும் தொலைதூர மற்றும் இடைத்தூர ஏவுகணைகள் கொண்ட வான் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தான் தரைப்படை படையில் இணைத்தது. பாகிஸ்தான் தரைப்படை தலைமை தளபதியான ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா கராச்சியில் உள்ள வான் பாதுகாப்பு படை பிரிவு மையத்திற்கு இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்குறிப்பிட்ட HQ-9/P தொலைதூர மற்றும் இடைத்தூர வான் பாதுகாப்பு அமைப்பை படையில் இணைத்த பிறகு வான் பாதுகாப்பு படைப்பிரிவின் தளபதி லெஃப்டினன்ட் […]
Read Moreஜம்மு காஷ்மீரில் கடந்த 10 நாட்களில் நடைபெற்ற 9 வெவ்வேறு என்கவுன்டர்களில் சுமார் 13 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டு உள்ளதாகவும், ஶ்ரீநகரை சேர்ந்த 5 பயங்கரவாதிகளில் மூவர் வீழ்த்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டு ராணுவம் துணை ராணுவம் மற்றும் காவல்துறையினரால் பல இடங்களில் பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டு வீழ்த்தப்பட்டு உள்ளனர். மேலும் சண்டைகளின் போது பயங்கரவாதிகளுக்கு சரணடைவதற்கான வாய்ப்புகளை அளித்தும் அவர்கள் தொடர்ந்து சண்டையிட முடிவு செய்ததால் அவர்களை வீழ்த்த வேண்டியதாக […]
Read More