Day: October 16, 2021

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகின் கடினமான கேம்ப்ரீயன் போட்டியில் இந்திய ராணுவம் வெற்றி !!

October 16, 2021

இங்கிலாந்து நாட்டில் அந்நாட்டு ராணுவம் உலகின் மிக கடினமான ரோந்து போட்டியை நடத்துவதும் இதில் பல்வேறு நாடுகளின் ராணுவங்கள் கலந்து கொள்வதும் வழக்கம். கேம்ப்ரீயன் மலைப்பகுதி மற்றும் வேல்ஸ் பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பரப்பில் நடைபெறும் இந்த போட்டியில் 48 மணி நேரத்தில் 65 கிலோமீட்டரை கடக்க வேண்டும். அந்த வகையில் பல நாட்டு ராணுவங்கள் பங்கு பெறும் இந்த போட்டியில் முதலாவதாக வரும் அணிக்கு தங்க பதக்கம் வழங்கப்படும். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்தியா […]

Read More

காஷ்மீரில் இரண்டு வீரர்கள் வீரமரணம் !!

October 16, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் செக்டாரில் அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்த தேடுதல் வேட்டையில் ஒரு இடைநிலை அதிகாரி உட்பட இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் ரைஃபிள்மேன் விக்ரம் சிங் நெகி மற்றும் ரைஃபிள்மேன் யுகாம்பர் சிங் என தெரிய வந்துள்ளது. இதையொட்டி கடந்த சில நாட்களில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

பாதுகாப்பு துறையில் இந்தியாவை உலகின் முன்னனி நாடுகளில் ஒன்றாக மாற்ற இலக்கு பாதுகாப்பு அமைச்சர் !!

October 16, 2021

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இன்று ஏழு புதிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்தியாவை பாதுகாப்பு துறையில் உலகின் முன்னனி நாடுகளில் ஒன்றாக மாற்ற இலக்கு வைக்கப்பட்டு இருப்பதாகவும், 2024ஆம் ஆண்டளவில் சுமார் 35,000 கோடி மதிப்பிலான ஏற்றுமதி உள்ளடக்கி 1,75,000 கோடி வருவாய் ஈட்ட திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாகவுமா அவர் தெரிவித்தார்.

Read More

இந்தியாவை உலகின் மிகப்பெரும் சக்தியாக மாற்ற விரும்புவதாக பிரதமர் மோடி அறிவிப்பு !!

October 16, 2021

300 ஆண்டு பழமையான ஆயுத தொழிற்சாலைகள் வாரியத்தை கலைத்து இன்று ஏழு புதிய நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அதற்கான துவக்க விழாவில் இந்திய பிரதமர் கலந்து கொண்டு பேசினார், அப்போது ஆயுத தயாரிப்பில் உள்ள தேக்க நிலையை இது மாற்ற உதவும் எனவும், சுதந்திரத்திற்கு பின்னர் தற்போது தான் முதல்முறையாக இந்திய ஆயுத தயாரிப்பின் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். மேலும் ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் உள்நாட்டு தயாரிப்பை கொண்டே தன்னிறைவு பெற்று இந்தியாவை […]

Read More

உள்நாட்டு விமானந்தாங்கி கப்பல்களை எதிர்ப்போரை சாடிய இந்திய கடற்படை தளபதி !!

October 16, 2021

இந்திய கடற்படையின் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் அவர்களிடம் ஊடகம் ஒன்றின் நிருபர் உள்நாட்டு விமானந்தாங்கி கப்பல்கள் வீண் செலவு என கூறி பலர் எதிர்க்கிறார்கள் உங்கள் கருத்து என்ன என்று கேட்டார் அதற்கு பதிலளித்த இந்திய கடற்படை தளபதி உள்நாட்டு விமானந்தாங்கி கப்பல்கள் ஒரு போதும் வீண் செலவல்ல எனவும், விக்ராந்தின் கட்டுமானம் மூலமாக 550 நிறுவனங்கள் மற்றும் 100 சிறு குறு உருவாகி உள்ளதாகவும், மேலும் இதில் பயன்படுத்தப்பட்ட இரும்பு முழுக்க இந்திய தயாரிப்பாகும் […]

Read More

இந்திய கடற்படைக்கு நான்கு நாடுகள் நீர்மூழ்கிகளை விற்க விருப்பம் விரிவான தகவல்கள் !!

October 16, 2021

இந்திய கடற்படை ஏற்கனவே ப்ராஜெக்ட்-75 என்ற திட்டத்தின் கீழ் ஃபிரான்ஸ் நாட்டிடம் இருந்து 6 அதிநவீன ஸ்கார்பீன் ரக கப்பல்களை வாங்கியது. இதனையடுத்து அடுத்த கட்டமாக மீண்டும் 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை பெற இந்திய கடற்படை திட்டமிட்டு ப்ராஜெக்ட்-75ஐ என்ற பெயரில் டென்டர் விட்டது. ஆக தற்போது இதற்கான போட்டியில் நான்கு நாடுகள் நான்கு வெவ்வேறு வகையான நீர்மூழ்கிகளை இந்திய கடற்படைக்கு தர ஆர்வம் காட்டி வருகின்றன. ஃபிரான்ஸ் தனது SHORTFIN BARRACUDA ரக நீர்மூழ்கியை […]

Read More