Breaking News

விமானப்படைக்கு முக்கியமான தினம்;MRSAM பாரக்-8 ஏவுகணை அமைப்பு படையில் இணைப்பு

  • Tamil Defense
  • September 9, 2021
  • Comments Off on விமானப்படைக்கு முக்கியமான தினம்;MRSAM பாரக்-8 ஏவுகணை அமைப்பு படையில் இணைப்பு

இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேம்படுத்திய MRSAM/Barak-8 ஏவுகணை அமைப்பு விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் இணைந்து மேம்படுத்திய இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள சோதனை மையத்தில் பலமுறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இந்த அமைப்பை இந்தியாவின் DRDO மற்றும் இஸ்ரேலின் Israel Aerospace Industries இணைந்து மேம்படுத்தியது ஆகும்.50-70கிமீ வரை வானில் வரும் எதிரியின் ஏவுகணை மற்றும் வான் இலக்குகளை தாக்கியழிக்க கூடியது ஆகும்.

வானில் வரும் எதிரியின் வான் இலக்குகளை வானிலேயே தாக்கியழிக்க கூடிய திறன் பெற்றது இந்த ஏவுகணை அமைப்பு.