மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாரத் கனரக மின்னனு நிறுவனம் போர்க்கப்பல்களுக்கான மேம்படுத்தபட்ட அதிவேக தாக்குதல் பிரங்கிகளை தயாரிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கோவா கப்பல் கட்டுமான தளம் மற்றும் பாரத் கனரக மின்னனு நிறுவனத்திற்கு இடையே கையெழுத்தாகி உள்ளது. இந்த மேம்படுத்தபட்ட அதிவேக தாக்குதல் பிரங்கிகளை பெல் நிறுவனத்தின் ஹரித்வார் தொழிற்சாலை பிரிவு தயாரிக்கும் எனவும், இந்த பிரங்கிகளின் சோதனை, கப்பலில் பொருத்தும் பணி, மீண்டும் சோதனை பயன்பாட்டுக்கு ஒப்படைத்தல் என அனைத்து பணிகளையும் […]
Read Moreகிழக்கு லடாக்கில் எல்லையோரம் நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகள் தொடர்ந்து சீன ராணுவ ட்ரோன்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றன. கோக்ரா, ஹாட் ஸ்ப்ரீங்ஸ் மற்றும் தவ்லத் பெக் ஒல்டி ஆகிய பகுதிகளில் இத்தகயை நடவடிக்கைகள் கடந்த 2012ஆம் ஆண்டு முதலாக அதிகரித்து உள்ளதாகவும், லடாக்கின் தெளிவான வான் பகுதியும் உயர்ந்த மலை சிகரங்களும் இந்த கண்காணிப்பு பணிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக திகழ்வதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த வருடம் முதலே நடைபெற்று வரும் எல்லை பிரச்சினையில் பல்வேறு பகுதிகளில் இருந்து […]
Read Moreஒரு வருடத்திற்கு மேலாக இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சினை நடைபெற்று வரும் நிலையில் சீனா எல்லையோரம் தனது இருப்பை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சீனா கிழக்கு லடாக்கில் குறைந்தபட்சமாக 7 இடங்களில் அதிநவீன ராணுவ உறைவிடங்களை கட்டி வருகிறது மேலும் விமான தளங்களை மேம்படுத்தி வருகிறது. காரகோரம் கணவாய் அருகே வஹாப் ஸில்கா தொடங்கி, பியூ, ஹாட் ஸ்ப்ரீங்ஸ், சாங்லா, டஷிகாங், மன்ஸா மற்றும் சூரூப் ஆகிய பகுதிகளில் இவை கட்டப்பட்டு […]
Read Moreஎல்லா வருடமும் பனிக்காலத்தின் போது பாகிஸ்தான் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் எல்லை வழியாக ஊடுருவுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஊடுருவலை துவங்கி விட்டதாக கூறப்படுகிறது, இதற்கு அடையாளமாக ஊடுருவல்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து உள்ளது குறிப்பிடப்படுகிறது. கடந்த சில நாட்களில் இரண்டு பயங்கரவாத குழுக்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர், அவர்களிடம் அதிக அளவில் பயங்கர ஆயுதங்களும் இருப்பது தெரிய வருகிறது. முதல் ஆபரேஷனில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து சுமார் […]
Read Moreஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் பயங்கரவாதிகளை ஊடுருவ வைப்பதற்காக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் குப்வாரா மாவட்டம் தாங்தார் செக்டாரில் அமைந்துள்ள டித்வால் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய பாதுகாப்பு படையினரும் திருப்பி தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தனர் இந்த சண்டை ஏறத்தாழ 15 நிமிடங்களுக்கு நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் படையினரின் இந்த அத்துமீறிய தாக்குதலில் இந்திய தரப்பில் […]
Read Moreஇந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் மூன்று நாட்கள் சுற்றுபயணமாக ஒமான் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மூத்த ராணுவ அதிகாரிகளை சந்தித்து பேசி பல முக்கிய விவகாரங்கள் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளார். இதன் ஒரு பகுதியாக இரண்டு நாடுகளுக்கு இடையே கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் மற்றும் ஒமானிய கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சயீஃப் பின் நாசர் […]
Read Moreநேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமூல்லா மாவட்டத்தில் செய்தியாளர்களை தரைப்படையின் 15ஆவது கோர் படைப்பிரிவு தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் பாண்டே சந்தித்து பேசினார். அப்போது அவர் எல்லையோரம் நடக்கும் அத்துமீறல்கள் ஊடுருவல்கள் ஆகியவை சிறிய அளவிலான சம்பவங்கள் ஆகும். அத்தகைய சவால்களை எதிர்கொள்ள இந்திய ராணுவம் முழு அளவில் எந்த நேரமும் தயாராக உள்ளது ஆகவே காஷ்மீர் மக்கள் அச்சப்பட தேவையில்லை என கூறினார். முன்னதாக ராணுவ நல்லெண்ண பள்ளி ஒன்றில் மாணவ செல்வங்களின் வசதிக்காக 10 […]
Read Moreகடந்த வருடம் சீனா ஒரு புதிய தொலைதூர வானிலிருந்து வானிலக்கை தாக்கும் ஏவுகணையை தயாரித்து உள்ளதாக அறிவித்தது அதன் பெயர் பி.எல்-15 ஆகும். பல்வேறு தளங்களில் சீன ராணுவ பார்வையாளர்கள் வல்லுனர்கள் ஆதரவாளர்கள் இந்த ஏவுகணை சுமார் 400 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பு கொண்டது என தம்பட்டம் அடித்து கொண்டனர். தற்போது சீனாவின் ஸூஹாய் நகரில் நடைபெறும் விமான கண்காட்சியில் இந்த ஏவுகணை பார்வைக்கு வைக்கபட்டு உள்ளது, அங்கு இதன் தாக்குதல் வரம்பு வெறுமனே 145 கிலோமீட்டர் […]
Read More