ஆப்கன் சிறையில் இருந்து தப்பிய ஜெய்ஸ் பயங்கரவாதிகள்;இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம்

  • Tamil Defense
  • August 27, 2021
  • Comments Off on ஆப்கன் சிறையில் இருந்து தப்பிய ஜெய்ஸ் பயங்கரவாதிகள்;இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம்

ஆப்கன் சிறையில் இருந்து தப்பிய 100க்கும் மேற்பட்ட ஜெய்ஸ் பயங்கரவாதிகள் மீண்டும் அந்த பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தாலிபன்களின் ஆப்கன் வெற்றியை அடுத்து ஜெய்ஸ் இயக்கத் தலைவர் மசூத் அசார் காஷ்மீர் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை தயார் படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவை ஜெய்ஸ் பயங்கரவாதிகள் தாக்க அனைத்து உதவிகளும் செய்ய தாலிபன்கள் ஜெய்ஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு உறுதியளிதுள்ளதாகவும் இது குறித்து இரு பயங்கரவாத இயக்கங்களும் சந்திப்பு மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

நமது படைப்பிரிவுகளும் இந்த வருடம் பல முக்கியமான ஜெய்ஸ் பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளனர்.கடந்த ஜீலை 31 அன்று புல்வாமாவில் நமது படைகள் முக்கிய பயங்கரவாத கமாண்டர்கள் இருவரை வீழ்த்தின.இந்த வருடம் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை நமது படைகள் வீழ்த்தியுள்ளன.