ஐந்து பயங்கரவாதிகளை போட்டுத்தள்ளிய வீரர்கள்

காஷ்மீரில் தற்போது நடைபெற்ற வந்த என்கௌன்டரில் ஐந்து பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.இந்த சண்டையில் ஒரு இராணுவ வீரரும் வீரமரணம் அடைந்துள்ளார்.

தெற்கு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இந்த சண்டை நடைபெற்று வந்தது.ஒரு பாக் லஷ்கர் கமாண்டர் மற்றும் லஷ்கர் கமாண்டர் நிஷாஷ் லோன் உள்ளிட்டு ஐந்து பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் நடைபெற்ற மூன்று என்கௌன்டரில் 10 பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.