
ALH Mk III வானூர்திகள் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது.விசாகப்பட்டிணத்தில் உள்ள ஐஎன்எஸ் தேகா தளத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
322 தேகா பிளைட் எனும் பெயரில் கிழக்கு கட்டளையகத்தின் கீழ் இந்த வானூர்திகள் இணைக்கப்பட்டன.இந்த விழாவில் துணை அட்மிரல் ஏபி சிங் அவர்களும் கலந்து கொண்டார்.
இந்த வானூர்திகள் கடலோர பாதுகாப்பு மற்றும் கடல்சார் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்படும்.