Breaking News

Day: June 13, 2021

பாதுகாப்பு படைகள் மீதான தாக்குதலுக்கு லஷ்கர் இயக்கம் பொறுப்பேற்பு

June 13, 2021

சனி அன்று பாதுகாப்பு படைகளின் மீதான தாக்குதலுக்கு லஷ்கர் பயங்கவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலில் இரு காவல் துறை வீரர்களும் இரு பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். வீரர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பேசிய காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங அவர்கள் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் விரைவில் நீதிக்கு முன் நிறுத்தப்படுவர் என கூறியுள்ளார். சேபோரில் இருந்த காவல் துறை வீரர்கள் கொரானா தடுப்பு பணிகளில் இருந்த போது இந்த தாக்குதலை லஷ்கர் பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடந்த போதே […]

Read More

கடலோர காவல் படையில் இணைந்த ALH Mk III வானூர்தி

June 13, 2021

ஹால் நிறுவனம் தயாரித்துள்ள ALH Mk III வானூர்தி கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டுள்ளது.மூன்று வானூர்திகள் முதற்கட்டமாக படையில் இணைந்துள்ளன. கடலோர காவல் படையில் வெவ்வேறு ஏவியேசன் ஸ்குவாட்ரான்களில் இந்த வானூர்திகள் இணைக்கப்பட்டு புவனேஷ்வர்,போர்பந்தர்,சென்னை மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் நிறுத்தப்பட உள்ளது. கடலோர காவல் படையின் கண்காணிப்பு பணிகளுக்கு இந்த வானூர்திகள் மிக உபயோகமானதாக இருக்கும்.இந்த வானூர்தியில் அதிநவீன சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு ரேடார்,எலக்ட்ரோ ஆப்டிக் Pod தவிர ஒரு இயந்திர துப்பாக்கியும் பொருத்தப்பட்டுள்ளதாக ஹால் […]

Read More

லடாக்கின் ஏரியில் ரோந்து பணிக்கு 17 அதிவேக போக்குவரத்து படகுகளை வாங்கும் ராணுவம் !!

June 13, 2021

கடந்த வருடம் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லையோரம் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு தனது இருப்பை வலுப்படுத்த பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் லடாக்கில் உள்ள பாங்காங் ஸோ ஏரியில் வீரர்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையிலான அதிவேக போக்குவரத்துபடகுகளை வாங்க இந்திய ராணுவம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இத்தகைய 17 படகுகளை கோவாவில் இயங்கும் அக்வேரியஸ் ஷிப்யார்டஸ் லிமிடெட் நிறுவனம் கட்டி தரும் எனவும் இதை போன்ற படகுகள் ஏற்கனவே கடற்படையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. […]

Read More

அணுசக்தி அணு ஆயுத நீர்மூழ்கிகளின் களமாகும் இந்தோ பசிஃபிக் பிராந்தியம் !!

June 13, 2021

இந்தோ பசிஃபிக் பிராந்தியம் பல்வேறு நாடுகளின் அணுசக்தி அணு ஆயுத நீர்மூழ்கிகளின் முன்னனி களமாக உருமாறி வருகிறது என ஒரு ஆய்வு கட்டுரை கூறுகிறது. அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வல்லரசு போட்டியில் இருதரப்பின் கடற்படைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன, குறிப்பாக அணுசக்தி அணு ஆயுத நீர்மூழ்கிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் வெர்ஜீனியா ரக அணுசக்தி அணு ஆயுத நீர்மூழ்கிகள் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் குறிப்பாக தற்போது படையில் உள்ள ஒஹையோ ரக நீர்மூழ்கிகள் முக்கிய […]

Read More

இந்திய தரைப்படையை பயங்கரவாத எதிர்ப்பு பணியில் இருந்து விலக்கும் காலம் வந்துவிட்டது !!

June 13, 2021

பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லை பிரச்சினைகள் குறிப்பாக கல்வான் மோதலுக்கு பிறகு பன்மடங்கு பதட்டத்தை அதிகரித்துள்ள நிலையில் நமது பாதுகாப்பு கொள்கையை சீராய்வு செய்ய வேண்டிய சூழலில் உள்ளோம். காரணம் இந்த இரு எல்லையோரமும் ஏற்படும் ஆபத்துகளை அதிகமாக கவனித்து செயல்பட வேண்டிய சூழலில் இந்திய தரைப்படை நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சி தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளது. ராணுவத்திற்கான அடிப்படை தேவையே வெளியில் இருந்து வரும் ஆபத்துகளை எதிர்கொண்டு நாட்டை […]

Read More

ஈரானுக்கு அதிநவீன செயற்கைகோள் வழங்கும் ரஷ்யா !!

June 13, 2021

ரஷ்யா ஈரானுக்கு மத்திய கிழக்கில் உள்ள ராணுவ இலக்குகளை கண்காணிக்க உதவும் வகையிலான ஒரு அதிநவீன செயற்கைகோளை வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது மிகவும் சக்தி வாய்ந்த கேமராவை கொண்ட ரஷ்யா தயாரித்த கனோபஸ்-5 எனும் செயற்கைகோள் ஈரானுக்கு வழங்கப்படும் எனவும் இது பொது பயன்பாட்டுக்கானது எனவும் கூறப்படுகிறது. இந்த கனோபஸ்-5 ரக செயற்கைகோள் மூலமாக பெர்சிய வளைகுடாவில் உள்ள எண்ணெய் கிணறுகள் முதல் இஸ்ரேலிய ராணுவ தளங்கள் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் […]

Read More

அடுத்த வாரம் சீன எல்லை நிலவரம் குறித்த இந்திய ராணுவத்தின் உயர்மட்ட குழுவின் ஆலோசனை!!

June 13, 2021

அடுத்த வாரம் இந்திய ராணுவத்தின் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்த உள்ளது அப்போது சீன எல்லை நிலவரம் குறித்தும் படைகளின் தயார்நிலை குறித்தும் பேசப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 16 ஆம் தேதி துவங்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து பிராந்திய தளபதிகளும் கலந்து கொள்ள உள்ளதாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. தொடர்ந்து தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் நரவாணே மற்றும் இதர தளபதிகள் தயார் நிலை குறித்து நேரடியாக ஆய்வு செய்து […]

Read More