சோபியானில் மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்; ஒருவன் சரணடைந்தான்

  • Tamil Defense
  • May 6, 2021
  • Comments Off on சோபியானில் மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்; ஒருவன் சரணடைந்தான்

ஜம்மு காஷ்மீரின் சோபியானில் நடைபெற்ற என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.மேலும் ஒரு பயங்கரவாதி சரணடைந்துள்ளான்.

தெற்கு காஷ்மீரின் சோபியானில் நேற்று இரவு காஷ்மீர் காவல் துறைக்கு வந்த உளவு தகவலை அடுத்து இந்த ஆபரேசன் தொடங்கியது.

அல் பத்ர் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த நான்கு புதிய பயங்கரவாதிகளும் மறைந்திருப்பதாக வந்த தகவலை அடுத்து ஆபரேசன் லாஞ்ச் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.