Day: May 21, 2021

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் ஒரு பார்வை !!

May 21, 2021

கடந்த 11 நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் இடையே நடந்த சண்டை இன்று முடிவுக்கு வந்துள்ளது இதற்கு முக்கிய காரணம் எகிப்தின் தலையீடு ஆகும். 11 நாட்களில் பலத்த இழப்பை சந்தித்த ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் தங்களுக்கு உதவிடுமாறு பல முறை எகிப்திடம் உதவி கோரியது இதனையடுத்து இஸ்ரேலுடன் ஒரளவுக்கு நல்லுறவை பேணும் எகிப்து பேச்சுவார்த்தையில் இறங்கியது. பின்னர் நேற்று இஸ்ரேலிய கேபினட் இதனை பரிசீலித்து ஏற்று கொண்டதாக அறிவித்தது இதை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ள […]

Read More

சண்டை நிறுத்தத்திற்கு பின்னர் ஹமாஸ் இயக்கத்தை கடுமையாக எச்சரித்த இஸ்ரேலிய பிரதமர் !!

May 21, 2021

சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் ஊடகங்களை சந்தித்த இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு இஸ்ரேல் காசாவில் வெற்றி பெற்றதாக கூறினார். மேலும் பேசும்போது காசாவில் இருந்து வருங்காலத்தில் ராக்கெட் ஏவப்படும் பட்சத்தில் மிக மிக கடுமையான பதிலடியை சந்திக்க நேரிடும் அதன் வீரியம் இதுவரை பார்த்திராத அளவில் இருக்கும் என எச்சரித்தார். மேலும் ஹமாஸ் இயக்கத்தின் எந்தவொரு தாக்குதலும் வருங்காலத்தில் துளியும் சகித்து கொள்ளப்படாது அதற்கான பதிலடி நிச்சயமாக கொடுக்கப்படும் என்றார். பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் […]

Read More

இந்திய தரைப்படைக்கு புதிய கன்னிவெடி அடையாளப்படுத்தும் கருவி !!

May 21, 2021

இந்திய பொதுத்துறை நிறுவனமான BEML சுமார் 55 கன்னிவெடி அடையாளப்படுத்தும் கருவிகளுக்கான ஒப்பந்தத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கன்னிவெடி அடையாளப்படுத்தும் கருவிக்கு BEML நிறுவனம் MFME Mk2 பெயரிட்டுள்ளது, மேலும் இது DRDO விடம் இருந்து தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கன்னிவெடி அடையாளப்படுத்தும் கருவியானது ஒரு மணி நேரத்திற்கு 1.2 கிமீ தொலைவிற்கு இந்த அடையாளப்படுத்துதல் பணிகளை மேற்கொள்ளும் எனவும் சுமார் 15கிமீ தொலைவுக்கான பொருட்களை சேமித்து வைத்து இருக்கும் ஈன […]

Read More

41 ஆண்டு சேவைக்கு பிறகு ஒய்வு பெறும் ஐ.என்.எஸ். ராஜ்புத் போர் கப்பல் !!

May 21, 2021

இந்திய கடற்படையின் முன்னனி போர்கப்பல்களில் ஒன்றான “ஐ.என்.எஸ் ராஜ்புத்” எனும் ஏவுகணை நாசகாரி கப்பல் வருகிற 21ஆம் தேதி ஒய்வு பெற உள்ளது. ரஷ்ய தயாரிப்பு கப்பலான இது கடந்த 1980ஆம் வருடம் மே மாதம் 4ஆம் தேதிவாக்கில் இந்திய கடற்படையில் இணைந்து தனது சேவையை துவங்கியது. தனது 41 வருட சேவைக்காலத்தில் மிக மிக முக்கியமான ஆபரேஷன்களை மேற்கொண்டு உள்ளது, பிரம்மாஸ் ஏவுகணையின் கடற்படை வடிவம் இக்கப்பலில் இருந்து தான் முதல்முறையாக ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் […]

Read More

ஆறாம் தலைமுறை போர் விமான என்ஜின் சோதனைகளை நிறைவு செய்த அமெரிக்கா !!

May 21, 2021

அமெரிக்க விமானப்படை தற்போது ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை இயக்கி வரும் நிலையில் தற்போது ஆறாம் தலைமுறை போர் விமான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு உள்ளது. தற்போது அத்தகைய ஆறாம் தலைமுறை போர் விமானத்திற்கு ஜெனரல் எலெக்ட்ரிக்ஸ் நிறுவனம் வடிவமைத்த எக்ஸ்.ஏ-100 எனும் என்ஜினை அமெரிக்க விமானப்படை சோதனை செய்துள்ளது. இந்த என்ஜின் மிகவும் நவீனமானது என கூறப்படுகிறது CMC PMC போன்ற தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

Read More

மிக்-21 விபத்து ; விமானி வீரமரணம்

May 21, 2021

பஞ்சாபில் மோகா என்னுமிடத்தில் விமானப்படையின் மிக்-21 விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விமான விபத்தில் விமானி வீரமரணம் அடைந்துள்ளார். ஸ்குவாட்ரான் லீடர் அபினவ் சௌதாரி அவர்கள் இந்த விமான விபத்தில் வீரமரணம் அடைந்துள்ளார். சூரத்கர் விமான தளத்தில் இருந்து இரவு நேர ரோந்து பணியை முடித்து திரும்பி கொண்டிருந்த வேளையில் இந்த விமான விபத்து நடந்துள்ளது. பறக்கும் சவப்பெட்டி என இந்த மிக்-21 விமானங்கள் அழைக்கப்படுவது வழக்கம்.இன்னும் இந்த விமானங்கள் படையில் இருந்து விடுவிக்கப்படாமல் உள்ளது. வீரவணக்கம்

Read More