Day: May 11, 2021

இந்தியாவை நோக்கி ராக்கெட் பிரிவு நிறுத்தம்; சீனாவின் செயல்

May 11, 2021

இந்திய எல்லைக்கு அருகாமையில் நிறுத்தப்பட்டுள்ள சீனப்படைக்களுக்கு truck-mounted rocket அமைப்புகளை சீனா வழங்கியுள்ளது.PHL-03 நெடுந்தூர பலகுழல் ராக்கெட்டின் டிஜிட்டல் ரகம் தற்போது இந்திய எல்லை நோக்கி நிறுத்தப்பட்டுள்ளது. சீன ஆர்டில்லரி படைப் பிரிவின் பிரதாக ஆயுதமாக இந்த ராக்கெட் அமைப்பு நிறுத்தப்பட்டுள்ளது.போர் ஏற்பட்டால் இவற்றை வேகமாக முக்கிய பகுதிகளுக்கு நகர்த்த முடியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.இதன் உதவியுடன் சீனா அனைத்து விதமாக பகுதிகளிலும் போரிட முடியும் என சீனா கூறியுள்ளது. இந்த ராக்கெட் லாஞ்சரில் 12 ஏவு […]

Read More

மீண்டும் இஸ்ரேல்-காசா மோதல்; 22 பேர் உயிரிழப்பு

May 11, 2021

ஜெருசலேமின் அல் அக்சா மசூதியில் நடைபெற்ற பிரச்சனை அடுத்து மீண்டும் இஸ்ரேலும் ஹமாஸுக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது.இரு பிரிவினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலை அடுத்த காசாவில் 22 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். திங்கள் முதல் கிட்டத்தட்ட 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஹமாஸ் வீசியுள்ளது.இதில் சுமார் 90% ஏவுகணைகளை அயன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பு வானிலேயே இடைமறித்து அழித்துள்ளதாக அந்நாட்டு இராணுவ செய்தி தொடர்பாளர் ஜோனதன் கான்ரிகஸ் கூறியுள்ளார். மேலும் இந்த தாக்குதல்களில் ஆறு இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளதாக […]

Read More

மூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய வீரர்கள்

May 11, 2021

காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். அனந்தநாக்கின் கோகெர்நாக் ஏரியாவில் உள்ள வைலூ என்னுமிடத்தில் இந்த என்கௌன்டர் நடைபெற்றுள்ளது.சிஆர்பிஎப்,இராணுவம் மற்றும் காஷ்மீர் காவல் துறை வீரர்கள் இணைந்து நடத்திய இந்த ஆபரேசனில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். மூன்று பயங்கரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read More

மருத்துவ உதவிகளுடன் இந்தியா வந்த கடற்படை போர்க்கப்பல்கள்

May 11, 2021

சமுத்ர சேது-2 ஆபரேசனின் கீழ் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட கன்டெய்னர்கள் ,சிலிண்டர்கள் மற்றும் மருத்துவ உதவிப் பொருள்களுடன் இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் இந்தியா வந்தடைந்துள்ளன. இந்திய கடற்படையின் ஸ்டீல்த் பிரிகேட் கப்பலான ஐஎன்எஸ் ட்ரைகன்ட் கத்தாரில் இருந்து 40 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனுடன் மும்பை வந்துள்ளது. பிரான்சின் ” Oxygen solidarity bridge ” கீழ் இந்த தொகுதி உதவிப்பொருள்கள் அனுப்பப்பட்டுவருகிறது.அடுத்த மூன்று மாதத்திற்குள் 600 மெட்ரிக் டன்கள் திரவ ஆக்சிஜன் இந்தியாவிற்கு வழங்கப்பட உள்ளது. அதே […]

Read More

வாரணாசியில் கோரானா மருத்துவமனை அமைத்த இராணுவம்

May 11, 2021

வரணாசியில் இராணுவம் கொரானா சிகிச்சை மையத்தை திறந்துள்ளது.வரணாசியில் பண்டிட் ராஜன் மிஸ்ரா என்ற மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. டெல்லி,அகமதாபாத் மற்றும் லக்னோவை தொடர்ந்து தற்போது வாரணசியிலும் இராணுவம் கொரானா சிகிச்சை மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. 250 படுக்கை வசதி கொண்ட ஐசியு- உடன் முழுதும் ஆக்சிஜன் வசதி கொண்ட 750 படுக்கைகள் கொண்ட மையம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வரனாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து யுனிவர்சிட்டியுடன் இணைந்து […]

Read More

சவுதி பாகிஸ்தான் இடையே நட்பு துளிர்க்கிறதா ??

May 11, 2021

சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மீண்டும் மோசமடைந்துள்ள உறவுகளை சீர்படுத்தும் வகையில் இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டுள்ளனர். காஷ்மீர் விவகாரத்தில் சவுதி அரேபியா இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தது இதனையடுத்து சவுதி மற்றும் பாகிஸ்தான் இடைய உரசல் ஏற்பட்டு உறவுகள் மோசமடைந்தன. சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரத்திற்கு சென்றுள்ளார் அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெட்டா விமான நிலையத்தில் சவுதி அரேபியாவின் தற்போதைய ஆட்சியாளரான பட்டத்து […]

Read More

ஜப்பானில் முதல் முறையாக ட்ரோன்களை களமிறக்கும் அமெரிக்கா !!

May 11, 2021

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் அமெரிக்க விமானப்படையின் RQ-4 க்ளோபல் ஹாக் மற்றும் அமெரிக்க கடற்படையின் MQ-4C ட்ரைட்டான் ஆகிய ட்ரோன்களை ஜப்பானில் நிலைநிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் அமெரிக்க கடற்படையின் MQ-4C ட்ரைட்டான் ஜப்பானில் பயன்படுத்தப்பட உள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவை இரண்டுமே ஜப்பானிய பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்தவும் பாதுகாப்பு வழங்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More