இந்திய கடலோர காவல்படை சமீபத்தில் அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் த்ருவ் மார்க்-3ஐ படையில் இணைத்தது.
சென்னையில் இருந்து சற்று தொலைவில் இந்த நடவடிக்கை கடலோர காவல்படையால் மேற்கொள்ளபட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்காலத்தில் இந்திய கடலோர காவல்படை சுமார் 16 த்ருவ் மார்க்-3 அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்களை படையில் இணைக்க உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
த்ருவ் மார்க்-3 அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் ஹெச்.ஏ.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன, மேலும் இவை கடற்படையிலும் இணைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.