சத்திஸ்கரில் நக்சல்களுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ஐந்து சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.10 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
சத்திஸ்கரின் பிஜப்பூரில் டாரேம் எனும் பகுதிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் இந்த மோதல் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவத்தை சத்திஸ்கரின் டிஜிபி அஸ்வதி அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.