தேஜஸ் விமானத்திற்காக இந்தியாவின் டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள On‐Board Oxygen Generation தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 500 மருத்துவ ஆக்சிஜன் பிளான்டுகளை டிஆர்டிஓ அமைக்க உள்ளது.
இந்த ஆக்சிஜன் பிளான்டுகள் ஒரு நாளைக்கு 195 சிலிண்டர்கள் வரை நிரம்பும் ஆற்றல் கொண்டது.இதற்கான தொழில்நுட்பத்தை டிஆர்டிஓ M/s Tata Advanced Systems Limited, Bengaluru மற்றும் M/s Trident Pneumatics Pvt. Ltd., Coimbatore ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.
இதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் டிஆர்டிஓ அறிவியலாளர்களுக்கு தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.