
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான எல்லை பிரச்சினை மிகவும் தீவிரமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பேசிய ரஷ்ய பாதுகாப்பு ஆய்வாளர் பாவெல் ஃபெல்கன்ஹாவ்ர் ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையிலான பிரச்சினை புறக்கணிக்கப்படுவதாகவும்,
பிரச்சினை பெரிதானால் அடுத்த நான்கு வாரங்களில் மிகப்பெரிய போர் வெடிக்கலாம் என கூறியுள்ளார்.
இது ஐரோப்பிய அளவில் அல்லது உலக உளவிலான போராக மாறலாம் என கூறியுள்ளார்.
ஆனால் எது எப்படியோ இது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.