Day: April 6, 2021

அரபிக்கடல் பகுதியில் துவங்கிய பன்னாட்டு போர் பயிற்சி !!

April 6, 2021

நேற்று அரபிக்கடல் அதாவது கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் பன்னாட்டு கடற்படை போர் பயிற்சிகள் துவங்கி உள்ளன. லா பெருஸ் என்ற இந்த பயிற்சியில் அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகள் பங்கு பெறுகின்றன. இந்திய கடற்படை சார்பில் சத்புரா ,கில்டான் மற்றும் பி8ஐ விமானங்கள் ஆகியவை பங்கு பெறுகின்றன. இந்த பயிற்சியில் கடல் பரப்பு போர்முறை, வான் பாதுகாப்பு மற்றும் வான் தாக்குதல் போர்முறைகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

போர் கப்பல்களை காக்கும் அதிநவீன பாதுகாப்பு அமைப்பு உருவாக்கம் !!

April 6, 2021

போர் கப்பல்களை பாதுகாக்க அதிநவீன பாதுகாப்பு அமைப்பை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி உள்ளது. ஜோத்பூர் பாதுகாப்பு ஆய்வகம் குறுந்தூர, இடைத்தூர மற்றும் நீண்டதூர பாதுகாப்பு கருவிகளை உருவாக்கி உள்ளது. சமீபத்தில் இந்திய கடற்படை அரேபிய கடல் பகுதியில் இந்த பாதுகாப்பு கருவிகளை வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. சாஃப் எனப்படும் இந்த கருவி ராக்கெட் போன்ற அமைப்பானது இந்த போர்க்கப்பல்களை எதிரி நாட்டு ஏவுகணைகளிடமிருந்து பாதுகாக்கும்.

Read More

ஐரோப்பிய அல்லது உலகப்போரே வெடிக்கும் அபாயம் பாதுகாப்பு நிபுணர் எச்சரிக்கை !!

April 6, 2021

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான எல்லை பிரச்சினை மிகவும் தீவிரமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பேசிய ரஷ்ய பாதுகாப்பு ஆய்வாளர் பாவெல் ஃபெல்கன்ஹாவ்ர் ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையிலான பிரச்சினை புறக்கணிக்கப்படுவதாகவும், பிரச்சினை பெரிதானால் அடுத்த நான்கு வாரங்களில் மிகப்பெரிய போர் வெடிக்கலாம் என கூறியுள்ளார். இது ஐரோப்பிய அளவில் அல்லது உலக உளவிலான போராக மாறலாம் என கூறியுள்ளார். ஆனால் எது எப்படியோ இது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Read More

எங்கள் அப்பாவை அனுப்பி விடுங்கள்; கெஞ்சும் வீரரின் குழந்தை

April 6, 2021

சத்தீஸ்கரில் சனிக்கிழமை நக்சலுடனான சண்டையை தொடர்ந்து காணாமல் போன மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) ஜவானின் குடும்ப உறுப்பினர்கள், அவரை விடுவிக்குமாறு நக்சல்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காஷ்மீரின் லோயர் பர்னாய் பகுதியைச் சேர்ந்த ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ், சண்டையிட்ட சிஆர்பிஎஃப் படையில் இருந்தவர் ஆவார்.அவர் நக்சல் பிடியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. “நான் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் என் கணவரிடம் பேசினேன், அவர் தனது பையையும் உணவையும் ஒரு ஆபரேசனுக்காக தயார் செய்து வருவதாகவும், […]

Read More