இந்திய ரஃபேல் விமானங்களுக்கு உதவும் வெளிநாட்டு விமானப்படை !!

இந்திய ரஃபேல் விமானங்களுக்கு மீண்டும் ஒருமுறை.ஐக்கிய அரபு அமீரக விமானப்படை உதவ உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி இந்த மாதம் ஃபிரான்ஸில் இருந்து இந்தியா வர உள்ள அடுத்த தொகுதி ரஃபேல் விமானங்கள் தொடர்ந்து பறப்பதை உறுதி செய்ய,

ஐக்கிய அரபு அமீரக விமானப்படையின் ஏ330 எரிபொருள் டேங்கர் விமானங்கள் எரிபொருள் நிரப்பி உதவ உள்ளன.

ஏற்கனவே நமது ரஃபேல் விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரக விமானப்படை இந்த வகையில் உதவியது குறிப்பிடத்தக்கது.