இந்தியா தயாரித்துள்ள மூன்றாவது நேத்ரா பறக்கும் ரேடார் விமானத்தை விமானப்படைக்கு மாற்ற உள்ளது டிஆர்டிஓ. இந்த நேத்ரா விமானத்தை Technology demonstrator-ஆக டிஆர்டிஓ உபயோகித்து வருகிறது.இதை விமானப்படை விமானிகள் தான் இயக்கி வந்தனர். தற்போது இந்த விமானத்தை டிஆர்டிஓ விமானப்படைக்கு அதிகாரப்பூர்வமாக மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இரு நேத்ரா விமானங்கள் விமானப்படையில் செயல்பாட்டில் உள்ளன.இந்த நேத்ரா விமானம் பிரேசிலின் எம்பரேயர் விமானத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்டது ஆகும். பாலக்கோட் தாக்குதலின் போது இந்த விமானத்தை […]
Read Moreஇரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் படையில் இணைகிறது !! இந்தியா உள்நாட்டிலேயே சொந்தமாக தயாரித்த இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் இந்த வருடம் படையில் இணைய உள்ளது. முதலாவது நீர்மூழ்கியான ஐ.என்.எஸ். அரிஹந்த் ஏற்கனவே படையில் உள்ளது, இரண்டாவது கப்பலின் பெயர் ஐ.என்.எஸ். அரிகாட் ஆகும். இந்த இரண்டு கப்பல்களும் சுமார் 6000 டன்கள் எடை கொண்டவை ஆகும் இதற்கடுத்த இரண்டு கப்பல்களும் சுமார் 7000 டன்கள் எடை கொண்டவையாக இருக்கும். அரிஹந்த் மற்றும் அரிகாட் கப்பல்களில் […]
Read Moreஒமன் வளைகுடாவில் மீட்பு பணியில் இந்திய கடற்படை !! ஒமன் வளைகுடா பகுதியில் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். தல்வார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. கடந்த 11ஆம் தேதி எம்.வி. நயான் எனும் வர்த்தக கப்பல் தங்களது கப்பல் என்ஜின் கோளாறு காரணமாக செயலிழந்து உள்ளதாக உதவி கோரியது. இதனையடுத்து அங்கு விரைந்த ஐ.என்.எஸ். தல்வார் ஒரு குழுவை அனுப்பி கப்பலை பழுது பார்க்க உதவியது சுமார் 7 மணிநேரம் கழித்து கப்பல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. […]
Read Moreபனிப்போர் காலத்திற்கு பிறகு பிரிட்டன் படிப்படியாக தனது அணு ஆயுதங்களை குறைத்தது, அதன் பின்னர் தற்போது முதல் முறையாக அணு ஆயுதங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பனிப்போர் காலத்தில் இங்கிலாந்து சுமார் 500 அணு ஆயுதங்களை வைத்திருந்தது தற்போது 195 அணு ஆயுதங்கள் தான் அவர்களிடம் உள்ளது அதில் 120 தயார் நிலையில் உள்ளன. வருகிற செவ்வாய் கிழமை இதற்கான அறிவிப்பை பிரிட்டன் அரசு வெளியிட உள்ளது ஆனால் எத்தனை அணு ஆயுதங்கள் புதியதாக சேர்க்கப்பட […]
Read Moreஇந்திய இராணுவம் மற்றும் உஸ்பெகிஸ்தான் இராணுவ படைகள் இணைந்து இந்தியாவில் போர்பயிற்சி நடத்தி வருகின்றன. டஸ்ட்லிக்-2 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சி இந்தியாவின் ராணிகேத்தில் உள்ள சௌபாட்டியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 10ம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி மார்ச் 19 வரை நடைபெறும்.
Read More