
எல்லையில் படைவிலக்கம் முழு வெற்றிக்கு நீண்ட தூரம் உள்ளது : ராணுவ தளபதி ஜெனரல் நரவாணே !!
ராணுவ தளபதி ஜெனரல் நரவாணே சமீபத்தில் பேசுகையில் படைவிலக்கம் நடைபெற்று வந்தாலும் முழுமையான வெற்றி பெற நீண்ட தூரம் உள்ளது என கூறினார்.
மேலும் சீனாவுடனான நம்பிக்கையின்மை காரணமாக கவனமாக ராணுவம் காய் நகர்த்தி வருவதாகவும்,
தெப்சாங், தெம்சாக், கோக்ரா மற்றும் ஹாட் ஸ்ப்ரீங்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் கவனிக்கப்பட்டு வருவதாகவும்,
அவற்றை சீர் செய்யும் பணிகளில் ராணுவம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.