ஜம்மு காஷ்மீரில் இரண்டு வெவ்வேறு என்கவுண்டர்கள் !!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் மூன்று லஷ்கர் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
அதை போல பட்காம் பகுதியில் நடைபெற்ற மற்றொரு என்கவுன்டரில் ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிரடி படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார.