இந்திய கடற்படையின் ஒய்வு பெற்ற விமானந்தாங்கி கப்பல் ஐ.என்.எஸ் விராட் தற்போது குஜராத் மாநிலத்தில் உடைக்கப்பட்டு வருகிறது. தற்போது என்விடெக் மரைன் கன்சல்டன்ட்ஸ் எனும் தனியார் நிறுவனம் இந்த கப்பலை மியூசியமாக மாற்ற விரும்புகிறது. இதனடிப்படையில் கப்பலை உடைக்க தற்காலிக தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற பெஞ்ச் கப்பலை உடைக்க தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read Moreவிண்வெளி துறையில் கால்பதித்துள்ள இந்திய தனியார் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் உலகின் முதல் 3டி ப்ரின்டட் ராக்கெட் என்ஜினை சோதனை செய்துள்ளது. இது ஒரு செமி க்ரயோஜினிக் என்ஜின் ஆகும், இரண்டு கட்டங்களை கொண்டது ஆகும். இந்த என்ஜின் 100கிலோ எடை கொண்ட பொருட்களை 700கிலோமீட்டர் உயரத்துக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. முதல் கட்ட என்ஜினுக்கு அக்னிடைட் எனவும் இரண்டாம் கட்ட என்ஜினுக்கு அக்னிலெட் எனவும் பெயர் வைத்துள்ளனர். இரண்டு என்ஜின்களும் முறையே 25 […]
Read Moreஇந்திய தரைப்படையின் ஒரு பிரிவான ரீமவுன்ட் அன்ட் வெர்ட்டினரி கோர் படைப்பிரிவு ராணுவ விலங்குகளின் பராமரிப்பு, பயிற்சி ஆகியவற்றிற்கு பொறுப்பானது. இந்த நிலையில் தில்லியில் உள்ள ராணுவ முகாமில் கொரோனா தொற்று ஏற்பட்ட வீரர்களை அடையாளம் காண மோப்பநாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தின் புகழ்மிக்க சிப்பிபாறை இனத்தை சேர்ந்த ஜெயா, மணி ஆகிய இரு நாய்களும் காக்கர் ஸ்பானியல் இனத்தை சேர்ந்த காஸ்பர் எனும் நாயும் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இரத்த மாதிரிகளில் உள்ள குறிப்பிட்ட […]
Read More