
ஃபிரான்ஸ் அரசாங்க வட்டாரத்தில் இருந்து வெளியாகும் செய்திகளின் படி துருக்கி மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாடு இனி இல்லை என கூறப்படுகிறது.
அதாவது பாகிஸ்தானுடைய மிராஜ்2000 மற்றும் அகோஸ்டா ரக நீர்மூழ்கி கப்பல்களை தரம் உயர்த்த அல்லது அவற்றிற்கான தளவாடங்களை விற்பதில்லை எனவும்,
மேலும் துருக்கியுடனும் இதே நிலைபாட்டை எடுத்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் மற்றும் துருக்கி நாடுகள் ஃபிரான்ஸில் நடைபெற்ற பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.