ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இந்த மறைவிடத்தை கண்டுபிடித்து அழித்துள்ளனர்.
வீரர்களுக்கு கிடைத்த உளவுத் தகவல்கள் அடிப்படையில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், ராஷ்டீரிய ரைபிள்ஸ் வீரர்கள் மற்றும் காஷ்மீர் சிறப்பு காவல் படை வீரர்கள் (மன்டி பகுதி) ஆகிய படைகள் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பூஞ்சின் மன்டி என்ற பகுதியில் இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.இந்த தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டறியப்பட்டது.
மறைவிடத்தில் இருந்து 1 ஏகே-47 ரக துப்பாக்கி,03 சீன கைத்துப்பாக்கிகள்,ஒரு ரேடியோ செட் ,கிரேனேடு மற்றும் வெடிபொருள்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.