இந்தியா ஆயுத இறக்குமதியை குறைக்கும் வகையில் பல்வேறு ஆயுத தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது.
அதை போல இந்திய தளவாடங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையிலான புதிய கமிட்டி ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்த கமிட்டியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் உறுப்பினர்கள் ஆவர்.
இந்த கமிட்டி ஏற்றுமதிக்கான அனுமதி வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ளும் என பாதுகாப்பு அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.