இந்திய விமானப்படையிடம் ஆரம்ப பயன்பாட்டு சான்றிதழ் பெற்ற இலகு பயன்பாட்டு ஹெலிகாப்டர் ஒன்று ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஹெலிகாப்டர்கள் பல ஆண்டு காலமாக பயன்பாட்டில் இருக்கும் சீட்டா மற்றும் சேத்தக் ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக அமையும்.
இது குறித்து ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவன தலைவர் பேசிய போது வரும் ஆகஸ்ட் 22 முதல் பெங்களூருவில் தயாரிப்பு பணிகள் துவங்க உள்ளதாக தெரிவித்தார்.