பெண்களை கோப்ரா கமாண்டோ படையில் இணைக்கும் திட்டம் !!

  • Tamil Defense
  • January 23, 2021
  • Comments Off on பெண்களை கோப்ரா கமாண்டோ படையில் இணைக்கும் திட்டம் !!

முதல் முறையாக மத்திய ரிசர்வ் காவல்படை தனது கோப்ரா படையில் பெண்களை இணைக்க திட்டமிட்டு உள்ளது, இவர்கள் உளவு அடிப்படையிலான பணிகளை மேற்கொள்வர்.

இது குறித்து மத்திய ரிசர்வ் காவல்படை தலைவர் ஏ பி மகேஸ்வரி கூறுகையில் பெண்கள் ஏற்கனவே சிறப்பாக செயல்படுவதாகவும், தற்போது அவர்களை கோப்ரா படைகளில் இணைக்க உள்ளதாகவும் கூறினார்.

கோப்ரா படையினர் பெரும்பாலும் நக்சல்பாரி பகுதிகள், வட கிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீரில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.