Breaking News

Day: January 8, 2021

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையை சோதித்த பாகிஸ்தான் !!

January 8, 2021

நேற்று பாகிஸ்தான் உள்நாட்டிலேயே தயாரிகாகப்பட்ட “ஃபாத்தா – 1” எனும் ராக்கெட்டை சோதனை செய்தது. இந்த ராக்கெட் 140கிலோமீட்டர் தொலைவு சென்று தாக்ககூடியது என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சோதனையில் பங்குபெற்ற விஞ்ஞானிகள் மற்றும் ராணுவத்தினரை பாக் பிரதமர் ராணுவ தளபதி ஆகியோர் பாராட்டி உள்ளனர்.

Read More

காஷ்மீரில் சுமார் 3கிமீ தூரம் பனியில் சுமந்து சென்று தாயையும் சேயையும் வீட்டில் சேர்த்த ராணுவத்தினர் !!

January 8, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலம் துனிவார் பகுதியை சேர்ந்த ஒரு பெண் பிரசவத்திற்காக பஸல்போரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பிரசவம் முடிந்து குழந்தை பிறந்த நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக வீட்டுக்கு செல்ல முடியாமல் இருந்தார். இதையடுத்து ராணுவத்தினர் பஸல்போராவில் இருந்து துனிவார் வரை சுமார் 3.5 கிமீ அந்த பெண்ணையும் அவரது குழந்தையையும் சுமந்து சென்று பத்திரமாக வீடு சேர்த்தனர்.

Read More

இலகுரக ட்ரோன் உருவாக்கும் பணியை துவங்கிய இந்தியா !!

January 8, 2021

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இலகுரக ட்ரோன்களை உருவாக்கும் பணியை துவங்கி உள்ளது. இவை கிரெனேட் லாஞ்சர்களில் இருந்து ஏவும் வகையிலும், சுமார் 40 நிமிடங்கள் பறக்கும் வகையிலும் வடிவமைக்கப்படும். இவை எந்த நேரத்திலும் எந்த கால சூழலிலும் இயங்கும் திறன் கொண்டவை ஆகும், இந்த திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் இவற்றை ஆயுதமாக பயன்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்படும்.

Read More

இந்தியாவில் ரஃபேல் விமானங்களை தயாரிக்க டஸ்ஸால்ட் நிறுவனம் விருப்பம் !!

January 8, 2021

இந்தியாவிலேயே ரஃபேல் விமானங்களை தயாரிக்க டஸ்ஸால்ட் நிறுவனம் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா வந்துள்ள ஃபிரெஞ்சு அதிபரின் ஆலோசகர் இம்மானுவேல் போன் இந்த விஷயம் பற்றி இந்திய அரசிடம் முன்மொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நூறு அல்லது அதற்கு நெருங்கிய எண்ணில் இந்தியா ரஃபேல் விமானங்களை வாங்க விரும்பினால் இந்தியாவிலேயே தயாரித்து கொடுக்க விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More