Breaking News

Day: January 6, 2021

இந்திய கடற்படைக்கு அவசரமாக நேவல் துப்பாக்கிகள் வழங்க அமெரிக்கா ஒப்புதல்

January 6, 2021

இந்தியா மற்றும் சீனா தனது கொம்புகளை சீவி எல்லையில் தருணத்திற்காக காத்திருக்கும் வேளையில் அமெரிக்க கடற்படை இந்திய கடற்படைக்கு அவரசமாக தனது நேவல் துப்பாக்கிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க கடற்படையிடம் இருந்து நேரடியாக இந்த மீடியம் காலிபர் துப்பாக்கிகளை பெற உள்ளது இந்திய கடற்படை.அவசரமாக மூன்று துப்பாக்கிகளை பெற்று அதை இந்திய கடற்படையிடம் உள்ள பெரிய கப்பல்களில் பொருத்த உள்ளது இந்தியா.கப்பல் எதிர்ப்பு மற்றும் விமான எதிர்ப்பு ஆபரேசன்களுக்காக இந்த துப்பாக்கி பயன்படுத்தப்படும். இந்த127 mm மீடியம் […]

Read More

சீனாவுக்கு எதிராக நிரந்தரமாக 2 கோர் படைகளை நிலைநிறுத்த தரைப்படை முடிவு !!

January 6, 2021

சீனாவுடன் எல்லையில் பிரச்சினை நடைபெற்று வரும் நேரத்தில் சிறிய மறுசீரமைப்புக்கு பின்னர் இரண்டு கோர் படைகளை சீனாவுக்கு எதிராக நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மதுராவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் 1 கோர் படை மற்றும் மேற்கு வங்க மாநிலம் பானாகரை தலைமை இடமாக கொண்டு இயங்கும் 17ஆவது கோர் ஆகிய படை பிரிவுகள் சீனாவுக்கு எதிராக நிலைநிறுத்தப்படும். இரண்டுமே தாக்குதல் கோர்கள் என்பதும் நேரடியாக போரில் முன்செல்லும் படைப்பிரிவுகள் என்பது […]

Read More

183 பயங்கரவாதிகள் ஊடுருவ தயாராக இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை !!

January 6, 2021

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனம் காஷ்மீர் பள்ளதாக்கு மற்றும் ஜம்மு பகுதிகளில் சுமார் 183 பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க தயாராக இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு பகுதியில் 118 பயங்கரவாதிகளும், காஷ்மீர் பள்ளதாக்கு பகுதியில் 118 பயங்கரவாதிகளும் எல்லையோரம் முகாம்களில் தயாராக உள்ளனர். இவர்களுக்கு ஜி.பி.எஸ் கருவிகள், பனிக்கால பாதுகாப்பு உடைகளை ஐ.எஸ்.ஐ கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லுனியா தோக், டேக்வார் ட்ரெவான், சிரிகோட் நபான், தான்டி கஸ்ஸி, பிபி நாலா, எல் பி சமானி, […]

Read More

முக்கிய இந்திய விஞ்ஞானியின் உடலில் ஆர்சனிக் விஷம் கொலை முயற்சியா ?? இந்திய விஞ்ஞானிகளின் மர்மமான மரணங்கள் !!

January 6, 2021

முக்கிய இஸ்ரோ விஞ்ஞானியான தபன் மிஸ்ரா சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தன்னை கொல்ல முயற்சி நடப்பதாக கூறியுள்ளார். அதாவது திடீரென உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது உடலில் ஆர்சனிக் எனும் வேதி பொருள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சுமார் 2 வருடங்கள் சிகிச்சையில் கழித்துள்ளார். இந்த பதிவு பல இந்திய விஞ்ஞானிகளின் மர்மமான மரணங்கள் மீதான கேள்வியை எழுப்புகிறது. அணுசக்தி, விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள் அதிகம் குறிவைக்கப்படுகின்றனர். […]

Read More

சியாச்சின் ஹீரோ நாய்ப் சுபேதார் பானா சிங்

January 6, 2021

இந்தியாவில் தற்போது பரம்வீர் சக்ரா பெற்று உயிர்வாழும் மூன்று ஹீரோக்களில் பானா சிங் அவர்களும் ஒருவர்.1987 சியாச்சின் போரில் அவரது பங்கு அளப்பரியது. சியாச்சின் இந்தியாவிற்கு இன்றியமையாதது.எந்த விலையும் அதற்கு பெரிதல்ல- ஹானரி கேப்டன் பானா சிங் காரகோரம் மலைத்தொடரின் மேலே சியாச்சின் கிளாசியர் அமைந்துள்ளது.இரு ட்ரில்லியன் கியூபிக் அடி ஐஸ் உடன் உலகின் மிகப்பெரிய அல்பைன் கிளாசியராக சியாச்சின் உள்ளது. உலகின் அதிக உயர மற்றும் அதிக குளிர் உடைய போர்க்களம் சியாச்சின் தான்.இங்கு -52டிகிரி […]

Read More

2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இந்திய விமானப்படைக்கு புதிய போக்குவரத்து விமானங்கள் !!

January 6, 2021

இந்திய விமானப்படை தற்போது 1960களில் படையில் இணைக்கப்பட்ட 57 ஆவ்ரோ-748 நடுத்தர ரக போக்குவரத்து விமானங்களை பயன்படுத்தி வருகிறது. இவற்றை மாற்றி விட்டு புதிய விமானங்களை வாங்க இந்திய விமானப்படை முடிவு செய்த நிலையில் அதற்கு ஏர்பஸ் நிறுவன தயாரிப்பான சி295 விமானம் தேர்வு செய்யப்பட்டது. அந்த வகையில் 56 சி295 விமானங்களை சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதில் 16 விமானங்கள் ஏர்பஸ் நிறுவனத்தால் தயாரித்து அனுப்பப்படும் […]

Read More

இந்திய விமானப்படைக்கு புதிய தளவாடங்கள் – ஏர்பஸ் விமானம், தேஜாஸ் மற்றும் இஸ்ரேலிய ட்ரோன்கள் !!

January 6, 2021

இந்திய விமானப்படை நவீனமயமாக்கலில் அதிக தீவிரம் காட்டி வருகிறது, அதன்படி அதிநவீன தளவாடங்களை வாங்கி குவிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இதை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த வருடம் விமானப்படைக்கான மூன்று முக்கிய ஒப்பந்தங்களை பட்டியலிட்டு உள்ளது. 1) ஏர்பஸ் போக்குவரத்து விமானங்கள் இந்திய விமானப்படை நீண்ட காலமாக ஆவ்ரோ748 வகை விமானங்களை சரக்கு மற்றும் வீரர்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகிறது. தற்போது அவற்றை மாற்றி விட்டு புதிதாக 56 ஏர்பஸ் சி295 விமானங்களை வாங்க […]

Read More

விரைவில் படையில் இணையும் இந்தியாவின் இரண்டாவது அரிஹந்த் ரக நீர்மூழ்கி !!

January 6, 2021

இந்திய கடற்படை தற்போது அரிஹந்த் வகையின் முதல் பலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கியான ஐ.என்.எஸ். அரிஹந்தை இயக்கி வருகிறது. விரைவில் அரிஹந்த் ரகத்தின் இரண்டாவதும் கடைசி கப்பலுமான ஐ.என்.எஸ் அரிகாட் படையில் இணைய உள்ளது. இந்த இரு நீர்மூழ்கி கப்பல்களும் அணுசக்தியால் இயங்குவதோடு மட்டுமின்றி, 750கிமீ தொலைவு வரை அணு ஆயுதம் சுமந்து சென்று தாக்கும் கே15 ரக ஏவுகணையில் நான்கை சுமந்து செல்லும் திறன் கொண்டவை ஆகும். இந்த கப்பல் படையில் இணையும் பட்சத்தில் உலகில் இந்திய […]

Read More

இந்திய இஸ்ரேல் தயாரிப்பு MRSAM அமைப்பு வெற்றிகரமாக சோதனை

January 6, 2021

கடந்த வாரம் இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேம்படுத்தியுள்ள நடுத்தூர வகை வான் பாதுகாப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் நிறுவனம் கூறியுள்ளது.50-70கிமீ தூரத்திற்குள் வரும் எதிரியின் விமானங்கள்,க்ரூஸ் ஏவுகணைகள் ஆகியவற்றை சுட்டுவீழ்த்த வல்லது இந்த அமைப்பு. டிஆர்டிஓ மற்றும் இஸ்ரேலின் ஐஏஐ இணைந்து மேம்படுத்திய இந்த அமைப்பை இந்தியா மற்றும் இஸ்ரேல் நாட்டு இராணுவங்களின் பயன்பாட்டில் உள்ளன.இந்த அமைப்பில் ஒரு கட்டளை மற்றும் கட்டுப்படுத்தி அமைப்பு, ஒரு அதிநவீன ரேடார் , நகரக்கூடிய […]

Read More