
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.மற்றும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சோபியானில் கனிகம் பகுதியில் நடைபெற்ற என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.பயங்கரவாதிகளின் இருப்பிடம் குறித்து காவல்துறை வீரர்களுக்கு உளவுத் தகவல்கள் கிடைத்ததை அடுத்து இந்த ஆபரேசன் லாஞ்ச் செய்யப்பட்டது.
தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்ட போது பாதுகாப்பு படைகள் சுதாரித்து கொண்டு எதிர்தாக்குதல் நடத்தினர்.
இதில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.