காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகளை வீழ்த்திய இராணுவ வீரர்கள்

  • Tamil Defense
  • December 24, 2020
  • Comments Off on காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகளை வீழ்த்திய இராணுவ வீரர்கள்

காஷ்மீர் காவல்துறை, சிஆர்பிஎப் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து நடத்திய வனிகம் பயீன் எனும் ஆபரேஷனில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக காஷ்மீர் காவல் துறைக்கு உளவுதகவல் கிடைத்ததை அடுத்து அந்த இடத்தை காஷ்மீா் காவல்துறை,சிஆர்பிஎப் மற்றும் இராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தனர் .

இதனை தொடர்ந்து பயங்ரவாதிகள் இராணுவ வீரர்களை தாக்கினர். பதில் தாக்குதல் நடத்திய இராணுவ வீரர்கள் இரண்டு பயங்கரவாதிகளை வீழ்த்தினர்.சண்டை தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இராணுவ வீரர்கள் சில ஆயுதங்களையும் தோட்டாக்களையும் கைப்பற்றியுள்ளனர்.

01 x ஏ.கே வகை துப்பாக்கிகள்
01 x பிஸ்டல்
03 x கையெறி குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.