பஞ்சாபின் அட்டாரி எல்லை வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரு பாக் பயங்கரவாதிகளை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.
பயங்கரவாதிகளிடம் இருந்து போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்களை எல்லைப் படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
பனிமூட்டத்தை பயன்படுத்தி அம்ரிஸ்ட் அருகே இந்த இரு பயங்கரவாதிகளும் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர்.
இரு ஏகே-47 ரக துப்பாக்கிகள் ,தோட்டாக்கள் மற்றும் போதை பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.தற்போது எல்லைப் படை வீரர்களுடன் பஞ்சாப் காவல் துறை வீரர்களும் இணைந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
71வது பட்டாலியன் பிஎஸ்எப் வீரர்கள் தான் இந்த பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளனர்.