காஷ்மீரில் புல்வாமாவில் நடைபெற்று வந்த என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.புல்வாமா மாவட்டத்தில் டிக்கான் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்த அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் வீரர்கள்.
தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்க ,என்கௌன்டர் தொடங்கியது.தொடர்ந்து நடைபெற்ற என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.
55வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் ,சிஆர்பிஎப் மற்றும் காஷ்மீர் காவல்துறை சிறப்பு படை வீரர்கள் இந்த என்கௌன்டரை நடத்தினர்.
இதில் அல் பத்ர் இயக்கத்தை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டனர்.