மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

  • Tamil Defense
  • December 30, 2020
  • Comments Off on மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

காஷ்மீர் காவல்துறை, சிஆர்பிஎப் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து நடத்திய ஆபரேஷனில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் ஸ்ரீநகரின் லாவேபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக காஷ்மீர் காவல் துறைக்கு உளவுதகவல் கிடைத்ததை அடுத்து ஜே.கே காவல்துறை, சி.ஆர்.பி.எப் மற்றும் இராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தனர் .

இதனை தொடர்ந்து பயங்ரவாதிகள் இராணுவ வீரர்களை தாக்கினர். பதில் தாக்குதல் நடத்திய இராணுவ வீரர்கள் மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்தினர்.பயங்கரவாதிகளை தொடர்ந்து தேடும் பணி நடந்து வரும் நிலையில் இராணுவ வீரர்கள் சில ஆயுதங்களை மீட்டுள்ளனர்.