காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோடு பகுதியில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்த பாக் படைகளுக்கு இந்திய இராணுவம் கொடுத்த பதிலடியில் ஐந்து பாக் வீரர்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
பூஞ்ச் மாவட்டத்தின் மான்கோட் செக்டாரில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியை நோக்கி பாக் தொடர்ந்து அத்துமீறி தாக்கி வந்தது.இதற்கு இந்தியா சார்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்த பதிலடியில் ஐந்து பாக் வீரர்கள் வீழ்த்தப்பட்டனர்.மற்றும் மூன்று பாக் வீரர்கள் காயமடைந்தனர்.சில பாக் இராணுவ பங்கர்களும் தகர்க்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் மட்டும் பாக் படைகள் 3200 முறை அத்துமீறி தாக்கியுள்ளன.இதில் 30 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.