Breaking News

Day: December 27, 2020

பயங்கரவாதத்தில் இருந்து விலகி தேசிய நீரோட்டத்தில் இணைந்த பயங்கரவாதிகள்

December 27, 2020

இந்திய மற்றும் மியான்மர் இராணுவம் தொடர்ந்து நடத்திய நடவடிக்கைகளின் பலனாக NSCN-K பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், பயங்கரவாதத்தில் இருந்து விலகி தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளனர்.இந்த பயங்கரவாத இயக்க தலைவர் நிக்கி ஸ்சும்மி இவரின் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் தேசிய நீரோட்டத்தில் இணைந்தனர். 2015ல் மணிப்பூரில் சந்தெல் மாவட்டத்தில் இராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் தாக்குதலில் தேடப்பட்டு வந்தவர் தான் இந்த நிக்கி ஸ்சும்மி என்பவர். இவரை NIA தேடி […]

Read More

பலுசிஸ்தான் போராளிகள் நடத்திய தாக்குதலில் ஏழு பாக் வீரர்கள் பலி

December 27, 2020

பலுசிஸ்தானின் ஹர்னாய் மாவட்டத்தில் பாக் இராணுவத்தின் ஃப்ரான்டியர் கார்ப்ஸ் படை வீரர்கள்மீது பலுசிஸ்தான் விடுதலை முன்னனி போராளி குழுவை சேர்ந்த வீரர்கள் நடத்திய தாக்குதலில் ஏழு பாக் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஹர்னாய் மாவட்டத்தின் ஷராக் பகுதியில் உள்ள பிரான்டியர் கார்ப்ஸ் படைப் பிரிவின் நிலையை போராளிகள் கடுமையாக தாக்கியுள்ளனர்.பாக் ஏழு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக கூறியுள்ள நிலையில் 14 வீரர்கள் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது பாக் இராணுவம் போராளிகளை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More

பாக் இராணுவ வானூர்தி விபத்தில் நான்கு வீரர்கள் உயிரிழப்பு

December 27, 2020

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.சனிக்கிழமை மாலை பாகிஸ்தானில் உள்ள ஆஸ்டோர் மாவட்டத்தின் மினிமர்க் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இது இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட 6 வது விபத்து ஆகும். மற்றொரு விபத்தில் Jf-17B இரட்டை இருக்கை பயிற்சி விமானம் செயலிழந்தது விபத்துக்குள்ளானது.ஆனால் அது ஒருபோதும் பாகிஸ்தானால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மோசமான பராமரிப்பு, உற்பத்தி குறைபாடுகள் மற்றும் பைலட் பிழைகள் காரணமாக […]

Read More