காஷ்மீரின் மச்சில் செக்டார் பகுதியில் உள்ள எல்லைக் கோடு பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் நடமாட்டங்கள் தென்படுவதை நமது வீரர்கள் கண்டறிந்தனர்.
நவம்பர் 7/8 இரவில் பயங்கரவாதிகள் நடமாட்டத்தை உறுதி செய்தனர் நமது வீரர்கள்.
அவர்களை இடைமறித்து நடத்திய தாக்குதலில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்.
ஒரு ஏகே ரக துப்பாக்கி மற்றும் இரு பேக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆபரேசன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.