இந்தியா புதிதாக படையில் இணைத்துள்ள ரபேல் விமானங்கள் விரைவில் “Hammer” air-to-ground precision-guided munitions பெற் உள்ளன.முதல் தொகுதி குண்டுகள் அடுத்த மாதம் இந்தியா வர உள்ளன.இந்தியா சீனா எல்லைப் பிரச்சனை பதற்றமாக உள்ள நிலையில் இந்த புதிய குண்டுகள் இந்தியா வரஉள்ளன. 20-70கிமீ வரை செல்லக்கூடிய இந்த குண்டுகள் கடினமான பங்கர்கள்,கடினமான கூரைகள் ஆகியவற்றை தகர்க்க வல்லது. அவசரகால முறையில் இந்த குண்டுகள் ஆர்டர் செய்யப்பட்டு தற்போது பெறப்படுகின்றன.
Read Moreகாஷ்மீரின் புல்வாமாவில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளான். ஆபரேசன் சத்லாம் எனும் பெயரில் நடைபெற்று வந்த இந்த என்கௌன்டரில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளான்.மற்றொரு பயங்கரவாதி படைகளிடம் சரணடைந்துள்ளான். பயங்கரவாதிகளுக்கு வீரர்கள் எப்போதும் சரணடைய வாய்ப்புகளை வழங்குவர்.அடையாளம் காணப்பட்ட பயங்கரவாதிகளின் குடும்பத்தினரை அழைத்து கூட பேசவைத்து அவர்களின் மனதை மாற்ற முயற்சி செய்வர். மேலும் சமீப காலமாக பயங்கரவாதிகள் சரணடைவது அதிகரித்து வருகிறது.இந்த என்கௌன்டரின் போது ஒரு ஏகே-47 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Read Moreகிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் பதற்றம் இன்னும் தொடர்கிறது.இந்திய படைகளின் தேர்ந்த நடவடிக்கைகளால் சீனாவின் எந்த சாகசத்திற்கும் பதிலடி தீர்க்கமாக வழங்கப்படுகிறது என தளபதி ராவத் கூறியுள்ளார். எல்லைக் கோட்டை மாற்றும் எந்த செயலையும் இந்தியா அனுமதிக்காது என அவர் தீர்க்கமாக கூறியுள்ளார். அணுஆயுதம் என்ற பாதுகாப்பு குடைக்குள் பதுங்கி இந்தியாவிற்குள் பயங்கரவாதிகளை அனுப்ப முயற்சி செய்த பாகிஸ்தானுக்கு உரி மற்றும் பாலக்கோட் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார். பாக்கிற்கு தனது உள்நாட்டில் […]
Read More