Breaking News

12 மணி நேரத்தில் நான்கு பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

  • Tamil Defense
  • October 10, 2020
  • Comments Off on 12 மணி நேரத்தில் நான்கு பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

புல்வாமாவில் தற்போது நடைபெற்று வந்த என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

புல்வாமாவின் கங்கன் பகுதியில் நடைபெற்று வந்த என்கௌன்டிரில் முக்கிய ஏ+ பயங்கரவாதி உட்பட இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

சண்டையின் முடிவில் இரு ஏகே ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன் காஷ்மீரின் குல்கமில் பாதுகாப்பு படைகள் நடத்திய அதிரடி என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.

ஆபரேசன் ச்சிங்கம் எனும் பெயரில் நடத்தப்பட்ட இந்த என்கௌன்டர் நேற்று தொடங்கியது.

சண்டையின் முடிவில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.அதில் ஒருவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் ஆவான்.