மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

  • Tamil Defense
  • October 7, 2020
  • Comments Off on மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

தெற்கு காஷ்மீரின் சோபியானில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் மூன்று பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.

தெற்கு காஷ்மீரின் சோபியானில் சுகன் ஏரியா பகுதியில் நேற்று இரவு சண்டை தொடங்கியது.இரு முதல் மூன்று பயங்கரவாதிகள் சிக்கியுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின.

காஷ்மீர் காவல் துறை , இராணுவத்தின் 44வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில் தற்போது மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.