இராணுவ அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் இன்று முக்கிய 44 பாலங்களை திறந்து வைக்க உள்ளார்.
எல்லைச் சாலைகள் அமைப்பு கட்டிய இந்த பாலங்களை வீடியோ கான்பெரன்ஸ் மூலமாக திறந்து வைக்கிறார் அமைச்சர் இராஜ்நாத் சிங்.
7 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இந்த பாலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றுள் அதிகபட்சமாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிராந்தியத்தில் பத்து பாலங்களும் ,லடாக் பிராந்தியத்தில் 7 பாலங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கு பிறகு ஹிமாச்சலில் 2 முக்கிய பாலங்களும்,பஞ்சாபில் நான்கும்,உத்ரகண்டில் எட்டு பாலங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தவிர அருணாச்சலில் எட்டு பாலங்களும், சிக்கிமில் நான்கு பாலங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.