Breaking News

சௌதியை எச்சரித்த இந்தியா -என்ன நடந்தது ?

  • Tamil Defense
  • October 30, 2020
  • Comments Off on சௌதியை எச்சரித்த இந்தியா -என்ன நடந்தது ?

சமீபத்தில் சௌதி வெளியிட்ட பணநோட்டில் இந்தியாவின் காஷ்மீரில் சில பகுதிகள் விடுபட்டிருந்தது.இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள இந்தியா சௌதி பிழையை உணர்ந்து திருத்துமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஷ்மீரை பாக்குடனோ அல்லது இந்தியாவுடனோ இணைக்காமல் தனித்த பகுதியாக அந்த பணத்தில் அச்சிடப்பட்டுள்ளது.தற்போது பாக் கட்டுப்பாட்டில் இருக்கும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்டிஸ்தான் பகுதிகளையும் தனியான பகுதியாக காட்டியுள்ளது.

ஜம்மு,காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என இந்தியா உறுதிபடக்கூறியுள்ளது.