
அருணாச்சல பிரதேசத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் சென்ற வாகனத்தை பயங்கரவாதிகள் தாக்கியதில் ஒரு அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர் வீரமரணம் அடைந்தார்.ஒரு வீரர் படுகாயம் அடைந்துள்ளார்.பயங்கரவாதிகளை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
அருணாச்சல பிரதேச மாநில மியான்மர் எல்லையில் சில மாவட்டங்களில் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.என்எஸ்சிஎன்-ஐஎம் என்ற பயங்கரவாத இயக்கம் செயல்பாட்டில் உள்ளது.