இந்தியா வியாழன் அன்று மீண்டும் லேசர் வழிகாட்டு டேங்க் எதிர்ப்பு ஏவுகணையை அர்ஜீன் டேங்கில் இருந்து சோதனை செய்துள்ளது.செப்டம்பர் 22ல் ஒரு முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட பிறகு மீண்டும் தற்போது வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 22 சோதனையின் போது டேங்க் எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக குறிப்பிட்ட இலக்கை தாக்கியழித்தது.
Read Moreசுமார் 409 கோடிகள் செலவில் இந்திய இராணுவதிற்கு புதிய கிரேனேடுகள் வாங்கப்பட உள்ளன.இவற்றை இந்திய தனியார் நிறுவனமான சோலர் குரூப் நிறுவனம் வழங்கும். டிஆர்டிஓ வடிவமைத்த புதிய தலைமுறை கிரேனேடுகள் தற்போது இராணுவத்தில் உள்ள பழைய இரண்டாம் உலகப் போர் காலத்து கிரேனேடுகளுக்கு மாற்றாக பயன்படுத்தபடும். இந்த மல்டி மோடு கையால் வீசக்கூடிய கிரேனேடு நமது டிஆர்டிஓ வின் பலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்டது ஆகும்.
Read Moreநேற்று இரவு பாக் படைகள் பூஞ்ச் செக்டார் பகுதியில் நடத்திய தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.மேலும் ஒரு வீரர் காயமடைந்துள்ளார். கர்நாய்ல் சிங் என்ற இராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.மேலும் ரைபிள்மேன் வீரேந்தர் சிங் என்ற வீரர் படுகாயமடைந்துள்ளார். மன்கோட் செக்டாரிலும் பாக் படைகள் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளன.இந்த தாக்குதலுக்கு இந்திய இராணுவம் சார்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டது.
Read More